தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்வா? – அமைச்சர் சிவசங்கர் பேட்டி!

Published by
பாலா கலியமூர்த்தி

இரு சக்கர வாகனங்கள் டாக்ஸியாக பயன்படுத்தப்படுவதை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை என அமைச்சர் சிவசங்கர் பேட்டி.

கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், நாட்டில் பல மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது, முதலமைச்சர் உத்தரவின் பேரில், மக்களுக்கு சிரமம் இருக்க கூடாது என்பதற்காக தமிழ்நாட்டில் பேருந்து கட்டண உயர்வு ஏதும் செய்யவில்லை என கூறினார்.

2000 புதிய பேருந்துகள் வாங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 2,400 பேருந்துகள் ஜெர்மன் நிறுவன பங்களிப்புடன் வாங்கவுள்ளோம். இதனால், விரைவில் புதிய பேருந்துகள் செயல்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தார்.

மேலும், ரேப்பிடோ குறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பைக் டாக்சி முறையை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. அதாவது, இரு சக்கர வாகனங்கள் டாக்ஸியாக பயன்படுத்தப்படுவதை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை என்றும் இதற்கான மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையக இல்லை எனவும் கூறினார். மேலும், அகவிலைப்படி உயர்வு குறித்து ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…

4 hours ago

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

5 hours ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

6 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

7 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

8 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

8 hours ago