Tirupur Duraisamy is the MDMK Assembly Speaker [File Image]
துரைசாமி கடிதம் சர்ச்சையானதை அடுத்து, துரை வைகோ கருத்து.
மதிமுக அவைத்தலைவர் பதிவில் இருந்து துரைசாமியை மாற்றுவது குறித்து ஜூன் மாதம் நடைபெறும் பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் என அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தெரிவித்ததாக கூறப்படுகிறது. துரைசாமி எழுப்பிய கேள்விகள் குறித்து பொதுச்செயலாளர் வைகோ பதிலளிப்பார், நடவடிக்கை குறித்து யோசிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
மதிமுகவை திமுகவுடன் இணைப்பது தொடர்பாக திருப்பூர் துரைசாமி, வைகோவிற்கு கடிதம் எழுதியிருந்தது சர்ச்சையானதை அடுத்து, துரை வைகோ இவ்வாறு தெரிவித்துள்ளார். மதிமுக சட்டமன்ற அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் எழுதிருந்தார்.
அதில், மதிமுக கட்சியை திமுகவுடன் இணைத்து விடுங்கள். மதிமுக கட்சிக்கு முன்னர் இருந்த பெயர் தற்போது மாறிவிட்டது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இது தற்போது மதிமுகவில் சர்ச்சையாகியுள்ளது. இதற்கு, மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ பதில் அளித்திருந்தார்.
கட்சியில் குழப்பத்தை விளைவிக்க முயற்சிப்பதாகவும், துரைசாமியின் கடிதத்தை புறக்கணிக்குமாறும் கூறியிருந்தார். இந்த தற்போது, மதிமுக அவைத்தலைவர் பதிவில் இருந்து துரைசாமியை மாற்றுவது குறித்து ஜூன் மாதம் பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும் என துரை வைகோ கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…