Tirupur Duraisamy is the MDMK Assembly Speaker [File Image]
துரைசாமி கடிதம் சர்ச்சையானதை அடுத்து, துரை வைகோ கருத்து.
மதிமுக அவைத்தலைவர் பதிவில் இருந்து துரைசாமியை மாற்றுவது குறித்து ஜூன் மாதம் நடைபெறும் பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் என அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தெரிவித்ததாக கூறப்படுகிறது. துரைசாமி எழுப்பிய கேள்விகள் குறித்து பொதுச்செயலாளர் வைகோ பதிலளிப்பார், நடவடிக்கை குறித்து யோசிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
மதிமுகவை திமுகவுடன் இணைப்பது தொடர்பாக திருப்பூர் துரைசாமி, வைகோவிற்கு கடிதம் எழுதியிருந்தது சர்ச்சையானதை அடுத்து, துரை வைகோ இவ்வாறு தெரிவித்துள்ளார். மதிமுக சட்டமன்ற அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் எழுதிருந்தார்.
அதில், மதிமுக கட்சியை திமுகவுடன் இணைத்து விடுங்கள். மதிமுக கட்சிக்கு முன்னர் இருந்த பெயர் தற்போது மாறிவிட்டது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இது தற்போது மதிமுகவில் சர்ச்சையாகியுள்ளது. இதற்கு, மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ பதில் அளித்திருந்தார்.
கட்சியில் குழப்பத்தை விளைவிக்க முயற்சிப்பதாகவும், துரைசாமியின் கடிதத்தை புறக்கணிக்குமாறும் கூறியிருந்தார். இந்த தற்போது, மதிமுக அவைத்தலைவர் பதிவில் இருந்து துரைசாமியை மாற்றுவது குறித்து ஜூன் மாதம் பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும் என துரை வைகோ கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…
திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…
லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…