சசிகலாவை விரைவில் சந்திப்பேன் – ஓபிஎஸ்

Published by
பாலா கலியமூர்த்தி

சசிகலாவை விரைவில் சந்திக்க இருப்பதாக சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை விரைவில் சந்திப்பேன். தன்னை பற்றி விமர்சித்த ஆர்பி உதயகுமாருக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை. இதனிடையே, நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியிருந்தார்.

அடையாறு இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் பண்ருட்டி ராமச்சந்திரனும் உடனிருந்தார். அதிமுகவில் சமீப காலமாக உட்கட்சி பிரச்சனை இருந்து வரும் நிலையில், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்த சமயத்தில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

இதனால் இரட்டை இலை சின்னமும் அவர்கள் வசம் சென்றது, ஆனாலும், இது நிரந்தரம் இல்லை, நாங்கள் தான் உண்மையான அதிமுக, தர்மம் வெல்லும் என ஓபிஎஸ் தொடர்ந்து கூறி வருகிறார். இதுதொடர்பாக வழக்கும் நீதிமன்றங்களில் உள்ளது. மேலும், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டவர்களை சந்திப்பேன் எனவும் தெரிவித்திருந்தார். அதன்படி, நேற்று டிடிவி தினகரன் இல்லத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்தார் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்.

அப்போது பேசிய அவர், எப்போது சசிகலா மற்றும் டிடிவி தினகரனை சந்திக்க உள்ளீர்கள் என்றே இதுவரை பலரும் என்னிடம் கேட்டார்கள். இந்தச் சூழலில் டிடிவி தினகரனை சந்தித்துள்ளேன். சசிகலா வெளியூரில் இருப்பதால் வந்தவுடன் சந்திக்கலாம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், சசிகலாவை விரைவில் சந்திப்பேன் எனவும் கூறியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

1 hour ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

2 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

3 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

3 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

4 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

4 hours ago