10-ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரி மனு இன்று உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.
சமீபத்தில், சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார். அப்போது, கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் +1 தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவித்தார்.
அதன்படி, 10-ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையும், + 1 வகுப்பு ஒத்தி வைக்கப்பட்ட தேர்வு ஜூன் 2-ம் தேதியில் நடத்தப்படும். அதேபோல, 34, 842 மாணவர்கள் பேருந்து வசதிஇல்லாமல் கடந்த மார்ச் 24-ம் தேதி தேர்வு எழுத முடியாமல் போனது. அதனால், அந்த +2 மாணவர்களுக்கு ஜூன் 4-ம் தேதி தேர்வு நடைபெறும் என தெரிவித்தார்.
+2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 27-ம் தேதி தொடங்கப்படும். மேலும் தேர்வு எழுதுள்ள மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுக்கு செய்து தரப்படும். இதனால், பெற்றோர் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
இதைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பு உள்ள இந்த காலத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ஒத்திவைக்க திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல தரப்பினர் தேர்வு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், 10-ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, இன்று 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…