சென்னையில் எழும்பூரில் செயல்பட்டு வரும் சி.எம்.டி எ அலுவலகத்தில் பணியாற்றி வரும் உயர் அதிகாரி ஒருவர் , தனக்கு கீழ் பணி புரிந்து வரும் பெண் ஊழியர் ஒருவருக்கு வாட்சப் மூலம் காதல் தொல்லை குடுத்து வந்துள்ளார். ஆரம்பத்தில் காலைவணக்கம், இரவு வணக்கம் என்று தொடங்கிய மெசேஜ் ஒரு கட்டத்தில் எல்லையை தாண்டி உள்ளது. இதற்க்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இருந்தும் அந்த ஊழியர் தொல்லை தாங்காமல் பணிக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் தனக்கு வேண்டிய ஒருவரிடம், உயர் அதிகாரி அனுப்பிய மெசேஜ் களை காட்டியுள்ளார்.
உடனே, அந்த நபர் சி.எம்.டி.எ அலுவலகம் சென்று அந்த உயர் அதிகாரியிடம் முறையிட்டுள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த பிரச்சனையானது அலுவலகத்தின் விசாக கமிட்டியின் விசாரணைக்கு சென்றுள்ளது. இந்நிலையில், பெண் ஊழியருக்கு தவறாக மெசேஜ் அனுப்பியது போன்று பல பெண்களிடம் இவ்வாறு தவறாக அந்த அதிகாரி செயல்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும், பெண் ஊழியருக்கு அனுப்பிய மெசேஜ் அலுவலகத்தில் அனைவரது கைபேசியிலும் பரவியுள்ளது. உயர் அதிகாரிக்கு வழங்க இருந்த பதவி உயர்வும் ரத்து செய்யப்பட்டு அவர் மீது விசாரணை நடத்தி வருகிறது சி.எம்.டி.எ நிர்வாகம்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…