மறைந்தும் உணவு அளிக்கும் வள்ளல்.. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.!

Published by
கெளதம்

Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவர் இந்த மண்ணில் இல்லை என்றாலும் கூட அவர் செய்த உதவிகள் எல்லாம் அவருடைய எண்ணத்தை நிலைநாட்டியே வைத்து இருக்கும்.

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம். அதற்கு பெயர் போனவர் விஜயகாந்த். அவர் உயிரோட இருந்த பொழுதும், தற்போது மறைந்த போதும் கூட, பலருக்கு உணவு அளிக்கும் வள்ளலாக திகழ்கிறார்.

கேப்டன் விஜயகாந்த் மறைந்த நாளில் இருந்து அவரது நினைவை போற்றும் வகையில் பொதுமக்கள் அவரது நினைவிடத்தில் தொடர்ச்சியாக மரியாதை செய்து வருகின்றனர். இதுவரை, பல அரிசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என மரியாதை செலுத்தியுள்ளார்.

தமிழகம் தாண்டி விஜயகாந்த் நினைவிடத்தில் 125 நாட்களில் தமிழகம் முழுவதிலும் இருந்து 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். உலகில் எத்தனையோ தலைவர்கள் இருந்தாலும் அவர்களது நினைவிடங்களில் உணவு வழங்கப்படுவதில்லை. ஆனால், விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வரும் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச்சின்னமாகப் போற்றப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, விஜயகாந்தின் நினைவிடத்திற்கு “லிங்கன் புக் ஆஃப்” ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விருதினை பெற்றுக்கொண்ட பிரேமலதா விஜயகாந்தின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

premalatha – Vijayakanth [File Image]
Published by
கெளதம்

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

8 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

8 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

9 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

9 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

10 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

11 hours ago