கலைஞரின் 98 ஆவது பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட ஓவிய போட்டி உலக சாதனை பெற்றுள்ளது.
கடந்த ஜூன் 3 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களுக்கு 98 ஆவது பிறந்த நாள். இந்த 98 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா உள்ளிட்ட ஐந்து நாடுகளில் ஓவிய போட்டி ஆன்லைன் வழியாக நடைபெற்றுள்ளது. இதில், இந்தியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் இருக்கும் 98 மாணவர்கள் தரையில் கலைஞரின் ஓவியத்தை வரைந்தனர்.
கொரோனா காலத்தில் மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் விதமாக கலாம் கல்வி அறக்கட்டளை சார்பில் இந்த ஓவிய போட்டி நடத்தியுள்ளனர். இதில் திருப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் 6 பேர் உட்பட மொத்தம் 98 மாணவர்கள் 98 இடங்களில் 98 நிமிடத்தில் கலைஞரின் ஓவியத்தை தரையில் வரைந்து உலக சாதனை படைத்துள்ளார். இந்த ஓவியத்தை வரைந்த 98 மாணவர்களின் பெயர்களும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இல் இடம்பெற்று உலக சாதனை படைத்துள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…