போலீசார் கண்காணித்த  ட்ரோன் கேமராவை கல்வீசித் தாக்க முயன்ற இளைஞர் கைது

Published by
Venu

மயிலாதுறை அருகே ட்ரோன் கேமராவை கல்வீசித் தாக்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் போலீசார் ட்ரோன் கேமரா மூலமாக கண்காணித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருப்பூரில் போலீசார் ட்ரோன் கேமரா மூலமாக கண்காணித்து வந்த நிலையில் கேரம் விளையாடி கொண்டு இருந்த இளைஞர்கள் கேமராவை பார்த்தவுடன் அலறி அடித்து ஓடினார்கள்.

அதில், ஒருவர் கையில் கேரம் பலகையை வைத்து கேமராவை மறைத்தது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது. இந்த வகையில் தான் மயிலாடுதுறையில் உள்ள சீர்காழியில் போலீசார் ஊரடங்கை மீறி வெளியே வருபவர்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.

இதற்கு இடையில் கடந்த 24-ஆம் தேதி எடமணல் என்ற பகுதியில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடினர். இதனை போலீசார் ட்ரோன் மூலமாக கண்காணித்தனர். கேமராவை பார்த்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடினார்கள். அந்த சமயத்தில் இளைஞர் ஒருவர் ட்ரோன் கேமராவை நோக்கி கல்வீசி தாக்குதல் நடத்த முயற்சி செய்தார்.

பின்னர் அந்த நபர் தப்பி ஓடினார். இதன் பின் போலீசார் விளையாடிய இளைஞர்களை காவல்நிலையம் அழைத்து சென்று உறுதிமொழி ஏற்கவைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனையயடுத்து போலீசார் முருகானந்தம் என்ற இளைஞரை கேமராவை தாக்கியது தொடர்பாக கைது செய்தனர்.

Published by
Venu

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

2 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

4 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

4 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

5 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

7 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

8 hours ago