சென்னையில் பல இடங்களில் ஒரு முறை பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்து வருகின்றன. மடிப்பாக்கத்தில் உள்ள ஜான் என்பவர் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஜான் கடைக்கு ஒரு நபர் ஆட்டோவில் வந்து உள்ளார். ஆட்டோவில் அந்த நபர் உங்கள் கடையை இணையதளத்தின் மூலமாக பார்த்து பைக் வாங்க வந்துள்ளேன் என கூறியுள்ளார்.
அந்த நேரத்தில் ஜானுக்கு வேறு ஒரு வேலை இருந்ததால் தனது சகோதரர் எட்வினிடம் கடையை விட்டு விட்டு சென்று உள்ளார். அந்த நபர் 30 ஆயிரத்துக்கு பைக் வாங்கி கொள்கிறேன் என்று கூறியுள்ளார். உடனே எட்வினிடம் அந்த நபர் பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
எட்வின் அவரை நம்பி பைக்கை கொடுத்துள்ளார். டெஸ்ட் டிரைவ் பைக் எடுத்து சென்று நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை இதனால் எட்வின் உடனே அவருக்கு போன் செய்தபோது அவர் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை ஏற்ற போலீஸார் அந்த நபரை தேடி வருகின்றனர். மேலும் போலீசார் அந்த நபர் இறங்கிய ஆட்டோ டிரைவரையும் , சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…