கேரளாவில் இருந்து தமிழகம் வரும் மக்களுக்கு ஜிகா வைரஸ் பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஜிப்ஸி காலனியில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொசு மூலம் ஜிகா வைரஸ் பரவுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
கேரள எல்லை பகுதிகளில் உள்ள வீடுகளில் நேரில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கேரள எல்லை பகுதியில் உள்ள யாருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் மக்களுக்கு ஜிகா வைரஸ் பரிசோதனை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் 7 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோயால் 3,929 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 122 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கருப்பு பூஞ்சை நோய்க்காக தமிழகம் முழுவதும் 7,000 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கேரளாவில், 22 மாதக் குழந்தை, 45 வயது முதியர் மற்றும் 29 வயது சுகாதாரப் பணியாளர் ஆகியோருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் 18 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதியாகியுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…