Categories: உலகம்

பொது இடங்களில் ஹிஜாப் அணியாத 2 நடிகைகள்..! ஈரான் குற்றம் சாட்டு..!

Published by
செந்தில்குமார்

ஈரானில் பிரபல நடிகைகள் இருவர் பொது இடங்களில் ஹிஜாப் அணியாமல், புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

ஈரானில் பிரபல நடிகைகள் இருவர் பொது இடங்களில் ஹிஜாப் அணியாமல், புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கடந்த 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு பெண்கள் பொது இடங்களில் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால், அந்த நிபந்தனையை மீறி கடந்த வாரம், 53 வயதான பான்டியா பஹ்ராம் ஒரு படப்பிடிப்பின் போது ஹிஜாப் அணியாமல் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேநேரத்தில், 61 வயதான கட்டயோன் ரியாஹி, ஹிஜாப் அணியாமல் தெஹ்ரானைச் சுற்றியுள்ள பொது இடங்களில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை வெளியிட்டார். அவர்கள் இருவரும் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதையடுத்து, தெஹ்ரானில் உள்ள காவல்துறை, ரியாஹி மற்றும் பஹ்ராம் ஆகியோருக்கு எதிரான வழக்கை ஈரானின் நீதித்துறைக்கு பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டால், இருவரும் அபராதம் அல்லது சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.

முன்னதாக, ஈரானின் கட்டாய ஆடைக் குறியீட்டை மீறும் பெண்களை கண்டுபிடிக்க பொது இடங்களில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்குவதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், இவர்கள் இவர்மீதும் இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும், ரியாஹி மற்றும் பஹ்ராம் ஆகியோர் ஈரானின் முன்னணி சினிமா நிகழ்வான ஃபஜ்ர் (Fajr) சர்வதேச திரைப்பட விழாவில் பல விருதுகளை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…

17 minutes ago

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…

1 hour ago

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

4 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

4 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

5 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

5 hours ago