sudan Airstrike [Image source : File image]
சூடான் நாட்டில் ஓயாத தாக்குதல், 22 பேர் கொல்லப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது.
வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த ஏப்ரலில், அந்நாட்டு ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே மோதல் வெடித்தது.
இந்நிலையில், சூடான் இராணுவத்திற்கும், விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையே ஏற்பட்ட மோதல்களில் 500-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தற்போது, சூடான் நாட்டில் கர்தூம் அருகே குடியிருப்பு பகுதியில் அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், 22 பேர் கொல்லப்பட்டதை அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (OCHA) அறிக்கையின்படி, ஏப்ரல் 15 முதல் 936,000 க்கும் அதிகமான மக்கள் மோதலால் புதிதாக இடம்பெயர்ந்துள்ளனர். இதில் சுமார் 736,200 உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் சுமார் 200,000 பேர் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…