Categories: உலகம்

நிறுத்தப்பட்ட வெடிகுண்டுகள் சத்தம்.. பிணை கைதிகளை விடுவித்த ஹமாஸ் – இஸ்ரேல்.!

Published by
மணிகண்டன்

பாலஸ்தீன நாட்டின் காசா நகரில் , இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த ஒரு மதத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1400 பேரும், ஹமாஸ் தரப்பில் காசா நகரில் சுமார் 15000 பேரும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காசா நகரில் நிலவும் போர் காரணமாக உயிர்சேதங்களில் பெண்கள், குழந்தைகள் அதிகமானோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. உயிர்சேதம் அதிகமாவதை கண்டு உலக நாடுகள் இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்தை தொடர்ந்து வலியுறுத்தியது.

காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்.! 30 பேர் உயிரிழப்பு, 100 பேர் காயம்.!

அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தலம் செய்தன. இதனை தொடர்ந்து, 4 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருந்தது. பிணை கைதிகளை விடுவிப்பதாக இருந்தால் 4 நாள் போர் நிறுத்தம் என்றும், பிணை கைதிகள் கூடுதலாக விடுவிக்கப்பட்டால் போர் நிறுத்த நாட்கள் நீட்டிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் என இரு தரப்பும் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நேற்று முதற்கட்டமாக 24 பிணை கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது. 10 தாய்லாந்து நாட்டை சேர்ந்த பிணை கைதிகள், ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பிணை கைதி, 9 பெண்கள் , 4 குழந்தைகள் உட்பட 13 இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பிணை கைதிகள் என 24 பிணை கைதிகள் நேற்று காசா – எகிப்து எல்லையில் விடுவிக்கப்பட்டனர்.

அதே போல, இஸ்ரேல் ராணுவ  கட்டுப்பாட்டில் இருந்த 7 ஆயிரம் பிணை கைதிகளில், 24 பெண்கள், 15 ஆண்கள் என மொத்தம் 39 பிணை கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அடுத்த 3 நாட்களுக்கு 150 பிணை கைதிகளை விடுவிப்பதாக இஸ்ரேல் ராணுவம் உறுதியளித்துள்ளது.

4 நாள் போர் நிறுத்தத்தை தொடர்ந்து வெடிகுண்டு சத்தங்கள் இல்லாமல் காசா நகரத்து மக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர். இதே நிலை தொடர வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது.

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

45 minutes ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

50 minutes ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

1 hour ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

3 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

3 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

4 hours ago