Categories: உலகம்

காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்.! 30 பேர் உயிரிழப்பு, 100 பேர் காயம்.!

Published by
செந்தில்குமார்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் காசா பகுதியில் இடைவிடாத வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்தி வருகிறது. இதனால் இரண்டு பக்கங்களிலும் இழப்புகள் ஏற்பட்டிருந்தாலும், பெரும்பாலும் காசா பகுதியில் இருக்கும் பாலஸ்தீனியர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, இஸ்ரேல் மக்கள் 1,400 பேர் உயிரிழந்ததாகவும். காசா நகரில் 6,150 குழந்தைகள் மற்றும் 4,000 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் போர் நிறுத்தம் குறித்து இந்தியா உட்பட பல உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

சீனாவில் அதிகரிக்கும் காய்ச்சல்.. புதிய வைரஸ் கண்டறியப்படவில்லை.! WHO-விடம் சுகாதாரத்துறை தகவல்.!

ஆனால், ஹமாஸ் அமைப்பு முற்றிலும் அழியும் வரையில் போர் நிறுத்தம் இல்லை என் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளிப்படையாக அறிவித்தார். ஏனெனில் ஹமாஸ் அமைப்பினர் போர் தொடங்கியபோது இஸ்ரேலை சேர்ந்த 200 க்கும் மேற்படூரை பணயக்கைதிகளாக சிறைபிடித்தது. அவர்களை இன்னும் விடுவிக்காமல் இருந்து வருகிறது.

இதனால் ஹமாஸ் அமைப்பினர் சிறைபிடித்து வைத்துள்ள பணயக்கைதிகளை விடுவிக்க, இஸ்ரேல் போர் இடைநிறுத்தம் செய்யுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், ஹமாஸிடம் பணயக்கைதிகளாக உள்ள 50 பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிக்க, 4 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் வீடு சுத்தமாகவும், பாத்திரம் கழுவாமல் இருந்தால் அபராதம் ..!

ஆனால் இப்போது வடக்கு காசா பகுதியில் உள்ள ஐ.நா.வால் நடத்தப்படும் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 பேர் காயமடைந்தனர் என்று பாலஸ்தீனிய குழு ஹமாஸ் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன அகதிகளுக்கான ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள ஐ.நா. நிவாரண மற்றும் வேலை முகமையால் (UNRWA) நடத்தப்படும் அபு ஹுசைன் பள்ளியின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும், ஹமாஸ் பயங்கரவாதிகள் காசாவிற்கு வெளியே எங்கிருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மொசாட் உளவு அமைப்பிற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

10 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

11 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

11 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

12 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

12 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

14 hours ago