boat accident [File Image]
இத்தாலியின் லம்பெடுசா தீவில் புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்ததில் 37 பேர் காணாமல் போயுள்ளதாக ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது.
துனிசியாவில் உள்ள ஸ்ஃபாக்ஸில் இருந்து புறப்பட்ட கப்பல், கேமரூன், புர்கினா பாசோ மற்றும் ஐவரி கோஸ்ட்டில் இருந்து 46 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு இத்தாலி அருகே பலத்த காற்று மற்றும் அதிக அலைகளில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 37 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களில் ஏழு பெண்களும் ஒரு பிறந்த குழந்தையும் அடங்கும். இந்த விபத்தில் உயிர் பிழைத்த நான்கு பேர் லம்பேடு என்ற பகுதி கரையை அடைந்து விபத்து குறித்து தகவல் அளித்துள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
சமீப காலமாக புலம்பெயர்ந்த படகு விபத்துக்கள் அதிகரித்துள்ளன என்றும், அதே நேரத்தில் மத்திய மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழையும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 2023 இல் இருமடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது என்று ஐரோப்பிய எல்லை நிறுவனமான ஃபிரான்டெக்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் லிபியாவில் இருந்து இழுவை படகு ஒன்று கிரேக்க கடற்கரையில் மூழ்கியது. இதில, இறந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆக உள்ளது.
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
ஆஸ்திரேலியா : கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…
நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…