Categories: உலகம்

கணவன் – மனைவி சண்டை.! டெல்லியில் தரையிறங்கிய பாங்காங் விமானம்.!

Published by
மணிகண்டன்

இன்று (புதன்கிழமை) ஜெர்மனி, முனிச் நகர் விமான நிலையத்தில் இருந்து லுஃப்தான்சா விமான எண் LH772 எனும் விமானம் பாங்காங்க் நோக்கி புறப்பட்டது. அந்த விமானத்தில் ஜெர்மனியை சேர்ந்த கணவனும், தாய்லாந்தை சேர்ந்த அவரது மனைவியும் பயணித்துள்ளனர்.

விமானம் பறந்து கொண்டிருக்கும் சமயம், கணவன் மனைவி இடையே பிரச்சனை எழுந்ததாக தெரிகிறது. உடனே தாய்லாந்தை சேர்ந்த அந்த பெண் விமானியிடம் இதனை கூறியுள்ளார். தன் கணவரால் தனக்கு ஆபத்து இருக்கிறது என புகார் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தீவிரமடைந்ததை அடுத்து உடனடியாக விமானி விமானத்தை பாதியில் தரையிறக்க முதலில் பாகிஸ்தான் அரசிடம் அங்குள்ள விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரியுள்ளார். ஆனால், அதனை அந்நாட்டு விமான நிலையம் மறுத்துவிட்டது.

இதனை அடுத்து, டெல்லி விமான நிலையத்தில் பாங்காங்க் விமானம் தரையிறங்க அனுமதி கேட்கப்பட்டது. உடனடியாக அனுமதி வழங்கப்பட்டவுடன், விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதன் பிறகு விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் விமானப்படை பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார் .

தான் செய்த தவறுக்கு அந்த நபர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அதன் பிறகு அவரை அதே விமானத்தில் அனுப்பலாமா அல்லது வேறு வழியில் அவரை ஊருக்கு அனுப்பலாமா என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தற்போது தான் தரையிறங்கிய காரணத்தால் சற்று நேரம் டெல்லி விமான நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக பாங்காங் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

2 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

4 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

6 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

6 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

7 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

7 hours ago