Heavy Smoking [File Image]
ஆஸ்திரேலியா : 30 ஆண்டுகளாக தொடர்ந்து ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட் புகைத்த ஒரு மனிதனுக்கு ஒரு அரிதான சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, அதிகப்படியான புகை பழக்கத்தால் அந்த மனிதனின் தொண்டைக்குள் அரிதான முடி வளர்ந்துள்ளது.
இதன் காரணமாக பெயர் குறிப்பிடத்தப்படாத ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் ஒருவர், கடந்த 2007 ஆம் ஆண்டில் கரடுமுரடான குரல், மூச்சுத் திணறல் மற்றும் நாள்பட்ட இருமல் போன்ற புகார்களை சந்தித்ததால், இது தொடர்பாக மருத்துவரை அணுகியுள்ளார்.
மருத்துவரிடம் அவர் 1990-ஆம் ஆண்டு 20 வயதில் புகைபிடிக்கத் தொடங்கியதாக கூறியுள்ளார். இதனையடுத்து, அவருக்கு இருந்த அறிகுறிகளின் அடிப்படையில், மருத்துவர்கள் நோயாளியின் சுவாசப்பாதையில் ஒரு சிறிய கேமராவை விட்டு பார்த்தனர்.
அப்பொழுது, இதற்கு முன்னதாக அறுவை சிகிச்சை செய்த அவரது தொண்டையில் ஒரு பகுதியிலிருந்து பல முடிகள் வளர்ந்து இருப்பதை கண்டறிந்தனர். இந்த முடிகள், வழக்கமாக ஆறு முதல் ஒன்பது வரை வளருமாம், அது சுமார் 2 அங்குல நீளத்தை எட்டும் என சொல்லப்படுகிறது.
இதனால், அவற்றை அகற்றுவதற்காக அவர் ஒவ்வொரு ஆண்டு என மொத்தம் 14 ஆண்டுகளுக்கு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஏனென்றால், முடிகளை வெளியே இழுப்பதன் மூலமும், நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பயன்படுத்துவதன் மூலமும் தற்காலிகமாக நிவாரணம் பெற்றாலும், முடி மீண்டும் வந்து கொண்டே இருந்தது.
இறுதியாக, 2022 இல் என்னசெய்வதென்று யோசித்து ஒரு முக்கிய முடிவை எடுத்தார். அதாவது, புகைபிடிப்பதை ஒரே அடியாக விட்டுவிட்டார, பின்னர் மருத்துவர்களை ஒரு முக்கிய சிகிச்சை அளித்தனர். அதன் மூலம் முடி வளர்ச்சியின் வேருடன் நீக்கியதும், அது மீண்டும் வளருவதைத் தடுக்க உதவியது. இதன் பிறகு அவர் புராணம் குணமடைந்தார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…