Categories: உலகம்

இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா அளிக்கும்.! ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு.!

Published by
மணிகண்டன்

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் வேளையில் அமெரிக்க அதிபர்  ஜோ பைடன் , இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள செய்தி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே இஸ்ரேலுக்கு குறிப்பிட்ட அளவு ராணுவ உதவிகளை அமெரிக்கா செய்து வரும் வேளையில் இந்த சந்திப்பு சர்வதேச அளவில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் பயணத்துக்காக புறப்பட்ட  அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சில மணி நேரத்திற்கு முன்னர் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்விற்கு வந்திறங்கினார். அவரை இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று வரவேற்றார். இந்த சந்திப்புக்கு பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

இஸ்ரேலில் உச்சக்கட்ட பாதுகாப்பு! ஆபத்தானதா அமெரிக்க அதிபரின் பயணம்?

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு ,  அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் ஒரே நாளில் 1400 இஸ்ரேலியர்களைக் கொன்றனர். அக்டோபர் 7ஆம் தேதி என்பது இஸ்ரேலுக்கு மோசமான நாள். ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை விட ஹமாஸ் அமைப்பினர் மோசமானவர்கள். ஹமாஸை தோற்கடிக்க உலக நாடுகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.

இஸ்ரேல் மக்களுக்கு உங்களை (அமெரிக்கா) போன்ற ஒரு உண்மையான நண்பர் எங்களுடன் துணை நிற்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு உங்கள் வருகை அனைவரது மனதையும் நெகிழ வைத்துள்ளது. நான் இஸ்ரேல் மக்கள் அனைவருக்காகவும் பேசுகிறேன். இன்றும் நாளையும் எப்போதும் அமெரிக்கா இஸ்ரேலுடன் நின்றதற்கு நன்றி என பேசினார்.

இதனை தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த முக்கியமான நேரத்தில் இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்து தரும். இஸ்ரேலுக்கு முழுமையாக அமெரிக்கா துணை நிற்கும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதனை அறிவித்த பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூறாமல் இருநாட்டு அதிபர்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…

2 hours ago

குஜராத் அணி அசத்தல் வெற்றி! குதூகலத்தில் பெங்களூர், பஞ்சாப்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…

2 hours ago

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!

சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…

3 hours ago

பருவமழை முன்னெச்சரிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

4 hours ago

இன்று இந்த 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..அலர்ட் செய்த வானிலை மையம்!

தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

4 hours ago

டெல்லியை பந்தாடி த்ரில் வெற்றி…முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி பெற்ற குஜராத்!

டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…

4 hours ago