Categories: உலகம்

3வது நாளாக தொடரும் தாக்குதல்: யாருடைய உதவியும் தேவையில்லை – இஸ்ரேல் அறிவிப்பு!

Published by
கெளதம்

பிற நாடுகளின் ராணுவம் உதவிகள் எங்களுக்கு தேவையில்லை, இந்த போரை நாங்களே பார்த்துக்கொள்வோம் என இஸ்ரேல் தூதர் அறிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தொடர்ந்து மூன்றாம் நாளாக போர் நடைபெற்று வரும் நிலையில், அங்கு பகல்-இரவு என்று பார்க்காமல் இரு தரப்பினரும் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறார்கள். இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் நுழைந்துள்ள ஹமாஸ் இயக்கத்தினர், காசா நகரை குறி வைத்து தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.

இந்த கொடூர தாக்குதலில் இரு தரப்பிலும் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வந்த நிலையில், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கியுள்ளது.

இப்படி போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹமாஸ் அமைப்புக்கு ஈரான், கத்தார், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேசமயம், லெபனான் மக்களும் பெருமளவில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், நேற்று லெபனான் மீது குண்டு மழை பொழிந்தது இஸ்ரேல் ராணுவம்.

மற்றோரு பக்கம், இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆதரவை தெரிவித்துள்ளன. இந்தியாவும் தனது ஆதரவை தெரிவித்து ஹமாஸ் அமைப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது, ஹமாஸ் குழுவினரை எதிர்கொள்ள எங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை என இஸ்ரேல்  அறிவித்துள்ளது. அமெரிக்கா எங்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவுவது உண்மைதான். எங்கள் போரை நாங்களே பார்த்து கொள்வோம், பிற நாடுகளின் உதவி தேவையில்லை என்று தாக்குதல் தொடர்பாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நோர் கிலோன் தகவல் தெரிவித்துள்ளார்.

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

3 hours ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

3 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

4 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

5 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

6 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

6 hours ago