Categories: உலகம்

ரஷ்யாவுக்குள் புகுந்து தாக்குதல்! வாக்னர் படையால் பதற்றம் அதிகரிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா சார்பில், களமிறக்கப்பட்ட வாக்னர் கூலிப் படைகள், ரஷ்யாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்.

ரஷ்ய தனியார் ராணுவ நிறுவனமான Wagner கூலிப்படை வீரர்கள் ரஷ்யாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உள்நாட்டு மோதலை தூண்டும் வகையில் வாக்னர் படை செயல்பட்டதாக ரஷ்யா பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளது. ரஷ்யாவின் குற்றசாட்டை அடுத்து, வாக்னர் படை வீரர்கள் திடீரென தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் நிலவி வருகிறது.

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்னர் கூலிப்படை சண்டையிட்டு வந்தது. அப்போது, ரஷ்ய இராணுவம், வாக்னர் கூலிப்படைகளைத் தாக்கியதாக குற்றசாட்டு எழுந்தது. இதனால், ரஷ்யாவுக்குள்ளே அரசு ராணுவம், தனியார் ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா சார்பில், களமிறக்கப்பட்ட வாக்னர் கூலிப் படைகள், ரஷ்யாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்த உள்ளதாக எச்சரிக்கை விடுத்தது. அதன்படி தற்போது தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், ரஷ்ய தலைநகரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாஸ்கோ மேயர் தகவல் தெரிவித்துள்ளார். ரஷ்ய ராணுவம் தனது படைகளைத் தாக்கியதாக குற்றம் சாட்டிய ரஷ்ய தனியார் ராணுவ நிறுவனமான Wagner-இன் தலைவர் பிரிகோஜின், தனது படைகள் உக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்குள் நுழைந்துவிட்டதாக கூறினார்.

தங்களுக்குத் தடையாக இருப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ரஷ்யாவின் ராணுவத் தலைமையை அழிப்போம். எங்கள் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டோம். இனி எங்கள் வழியில் எதிர்கொள்ளும் எல்லாவற்றையும் துவம்சம் செய்வோம். ராணுவத் தலைமை மீதான தனது விமர்சனம் ஒரு சதி அல்ல, நீதிக்கான மாற்று வழி என்றார்.

மேலும், உக்ரைன் போரை எதிர்க்கொள்ள ரஷ்யா சார்பில், களமிறக்கப்பட்ட வாக்னர் கூலிப் படைகள் மீது ரஷ்ய ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் ரஷ்யாவின் தலைமையத்துவத்தை கவிழ்க்க, படையெடுப்போம் என வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் எச்சரிக்கை விடுத்திருந்தார். ரஷ்யா சார்பாக உக்ரைனில் சண்டையிட்ட படைகளுக்குள் ஏற்பட்டுள்ள இந்த மோதலை அடுத்து, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

மாஸ்கோவின் முக்கிய இடத்தில் ராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர். மேலும், ரஷ்யாவின் முக்கிய பகுதிகள் அனைத்திற்கும் ராணுவ ஆயுத வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ரஷ்யாவிற்கு எதிராக படையெடுப்போம் எனக் கூறிய வாக்னர் படை குழு தலைவர் பிரிகோஜின் மீது ரஷ்யா வழக்குப்பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அதிமுக கூட்டணிக்கு எதிராக பேசக்கூடாது – அட்வைஸ் கொடுத்த அமித்ஷா!

மதுரை : மதுரை வேலம்மாள் திடலில் இன்று (ஜூன் 8, 2025) மாலை 3 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…

28 minutes ago

“ஐயா நல்ல செய்தியை சீக்கிரம் சொல்லுவாங்க..”- ஜி.கே.மணி பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே எழுந்த பிரச்சினை…

1 hour ago

“இது வெஸ்ட் இண்டீஸ் போகாத”…ரோஹித் எச்சரிக்கையை மீறி சென்ற புஜாராவுக்கு நடந்த மர்ம சம்பவம்?

சென்னை : 2012-ல் இந்தியா A கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்தபோது, வீரர் செட்டேஷ்வர் புஜாராவுக்கு ஒரு…

2 hours ago

அதிமுக கூட்டணியில் பல கட்சிகள் வரும்..இபிஎஸ் பேச்சு!

சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் காட்சிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வருகிறது.…

2 hours ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமான…

3 hours ago

மஸ்க் உடனான உறவை நீட்டிக்க விருப்பம் இல்லை – ட்ரம்ப் திட்டவட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாகி எலன் மஸ்க் இடையே ஏற்பட்ட வார்த்தை மோதல்…

3 hours ago