Categories: உலகம்

இஸ்ரேல் பிரதமரை சந்தித்து பேசினார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்!

Published by
கெளதம்

இஸ்ரேல்-பாலத்தீன போர் தொடர்ந்து 13வது நாளாக நடந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபரை தொடர்ந்து, இஸ்ரேலுக்கு வந்துள்ளார் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்.

இப்பொது, டெல் அவிவில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆலோசனை நடத்தினார். பின்னர், சர்வதேச சட்டத்திற்கு இணங்க தங்களை தற்காத்துக் கொள்ள இஸ்ரேல் நாட்டிற்கு முழு ஆதரவு அளிக்கிறது என்று இஸ்ரேல் சென்றடைந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.

இவ்வளவு பயங்கரமான சூழ்நிலையில் இங்கு இருப்பதற்கு நான் வருந்துகிறேன். மனிதாபிமான உதவிக்காக காஸாவுக்குள் நுழைய முடிவு  செய்ததை நான் வரவேற்கிறேன் என்றார். முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு தண்ணீர், உணவு மற்றும் பிற பொருட்களை அனுமதிக்க ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இங்கிலாந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், காஸாவில் மருத்துவமனை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், நேற்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் சென்றார். அங்கு இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார்.

காசா மருத்துவமனை தாக்குதல் – ஆதாரங்களை வெளியிட்டது இஸ்ரேல்!

இதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த முக்கியமான நேரத்தில் இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்து தரும். இஸ்ரேலுக்கு முழுமையாக அமெரிக்கா துணை நிற்கும் என திட்டவட்டமாக தெரிவித்து ஆயுதங்களை வழங்க இருப்பதாகவும் தெரிவித்துக்கொண்டார்.

இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா அளிக்கும்.! ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு.!

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போர் கடந்த 7ம் தேதி தொடங்கி இன்று 13வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…

28 minutes ago

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…

1 hour ago

1 பில்லியன் டாலர் கடன்.., IMF அனுமதி.! “இப்படி நிதி வழங்கினால் பாகிஸ்தான் எப்படி போரை நிறுத்தும்?”- உமர் அப்துல்லா கேள்வி

காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…

1 hour ago

பாகிஸ்தானில் பாயும் இந்திய நதி நீர்! திடீர் மழையால் தண்ணீர் திறப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…

2 hours ago

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

2 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

3 hours ago