Categories: உலகம்

மூன்று விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பிய சீனா.. காரணம் என்ன?

Published by
பாலா கலியமூர்த்தி

China: சீனா தனக்கென சொந்தமாக உருவாக்கியுள்ள விண்வெளி நிலையத்திற்கு 3 விண்வெளி வீரர்களை 6 மாத பணிக்காக அனுப்பியுள்ளது.

விண்வெளியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக ரஷ்யா உட்பட உலக நாடுகள் கூட்டாக இணைந்து சர்வதேச விண்வெளி மையத்தை ஏற்கனவே நிறுவியுள்ள நிலையில், அதன் ஆயுட்காலம் வரும் 2030ல் முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் சீனா ஒரு பயங்கரமான முயற்சியை மேற்கொண்டு தனக்கென சொந்தமான ஒரு தனி விண்வெளி நிலையத்தை விண்ணில் உருவாக்கி உள்ளது.

சீனா உருவாக்கியுள்ள இந்த விண்வெளி நிலையத்திற்கு டியாங்கோங் (Tiangong space station) என பெயரிடப்பட்டது. இதற்கு தேவையான பொருட்களை விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி அதற்கான பணியில் கடந்த சில ஆண்டுகளாக சீனா மும்மரமாக ஈடுபட்டு வருகிறது.

அதன்படி, மூன்று விண்வெளி வீரர்கள் அடங்கிய குழுவை 6 மாத கால சுழற்சியின் அடிப்படையில் தனது விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பல்வேறு ஆராய்ச்சிகள் உள்ளிட்ட கட்டுமான பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், தற்போது வழக்கமான 6 மாத சுழற்சி பணியின் அடிப்படையில் சீனா தனது விண்வெளி நிலையத்திற்கு மூன்று விண்வெளி வீரர்களை அனுப்பியுள்ளது.

வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் என்ற செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று இரவு ஷென்சோ-18 என்ற ராக்கெட் (Shenzhou-18) மூலம் மூன்று விண்வெளி வீரர்கள், விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. விண்ணுக்கு அனுப்பப்பட்ட அந்த மூன்று பேர் சுமார் 6 மணிநேரத்தில் சீனாவின் விண்வெளி நிலையத்தை அடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 6 மாத பயணத்தில் 43 வயதான யே குவாங்ஃபு, 34 வயதான லி காங் மற்றும் 36 வயதான லி குவாங்சு ஆகியோர் உள்ளனர். இந்த மூன்று பேரும் முன்னாள் விமானப்படை விமானிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழு ஆறு மாதங்கள் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து, விண்வெளி நிலையத்தின் நிலைப்பாடு மற்றும் அறிவியல் உள்ளிட்ட சோதனைகளை நடத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…

4 minutes ago

1 பில்லியன் டாலர் கடன்.., IMF அனுமதி.! “இப்படி நிதி வழங்கினால் பாகிஸ்தான் எப்படி போரை நிறுத்தும்?”- உமர் அப்துல்லா கேள்வி

காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…

7 minutes ago

பாகிஸ்தானில் பாயும் இந்திய நதி நீர்! திடீர் மழையால் தண்ணீர் திறப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…

31 minutes ago

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

1 hour ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

2 hours ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

3 hours ago