Thirukkural in Tok Pisin [Image Source : Twitter/ @narendramodi]
பப்புவா நியூ கினியாவின் டோக் பிசின் மொழியில் திருக்குறளை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக பப்புவா நியூ கினியாவிற்கு நேற்று சென்றடைந்தார். அவரை பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராப் வரவேற்றார். டோக் பிசின் என்பது பப்புவா நியூ கினியாவின் அதிகாரப்பூர்வ மொழி ஆகும்.
தென்மேற்கு பசிபிக் தேசத்தின் மக்களுக்கு இந்திய சிந்தனை மற்றும் கலாச்சாரத்தை நெருக்கமாக கொண்டு செல்வதற்காக டோக் பிசின் மொழியில் தமிழில் மிகவும் உன்னதமான நூலான திருக்குறளை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராப் இன்று வெளியிட்டனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தின் சுபா சசீந்திரன் மற்றும் ஆளுநர் சசீந்திரன் முத்துவேல் ஆகியோரால் இணைந்து எழுதப்பட்ட இந்த புத்தகம், இந்திய சிந்தனை மற்றும் கலாச்சாரத்தை பப்புவா நியூ கினியா மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வருகிறது என்றுள்ளார்.
மேலும், பப்புவா நியூ கினியாவில், டோக் பிசின் மொழியில் திருக்குறளை வெளியிட்ட பெருமை எனக்கும் பிரதமர் ஜேம்ஸ் மராப்பேவிற்கும் கிடைத்தது. குறள் ஒரு தலைசிறந்த படைப்பு, இது பல்வேறு துறைகளில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது. என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…