Earthquake in Nepal [Representative Image]
நேபாள நாட்டில் இன்று காலை 11.45 மணியளவில், இமயமலை பகுதி மாவட்டம் ஹால்ட்வாணி பகுதியில் இருந்து வடகிழக்கில் 39 கிமீ தூரத்தில் பஜாங்கில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நேபாளத்தின் தேசிய நிலநடுக்க அளவீடு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது .
இந்திய நில அதிர்வு வானிலை ஆய்வு மையத்தின் ரிக்டர் அளவுகோலின்படி 5 என பதிவாகியுள்ளது . நேபாளத்தின் தேசிய நிலநடுக்க அளவீடு மற்றும் ஆராய்ச்சி மைய அளவீட்டின்படி 4.9 ரிக்டர் என பதிவாகியுள்ளது.
அதேபோல ஐரோப்பிய வானிலை ஆய்வு மையமும், இந்த நில அதிர்வை உறுதிப்படுத்தியுள்ளது. அவர்கள் 5 முதல் 6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இந்த நில அதிர்வானது இந்திய மாநிலம் உத்தரகாண்ட் பகுதியிலும், தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த அக்டோபர் 3 (செய்வ்வாய்) பிற்பகல் 2:40 மணியளவில், பஜாங்கில் உள்ள டல்கோட்டில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பின்னர் இன்றும் அதே இடத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது மக்களை அச்சமடைய வைத்துள்ளது.
நேற்று, நேபாள பிரதமர் உத்தரவின் பெயரில், அரசின் உயர்மட்டக் குழுவானது அமைக்கப்பட்டு, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களைக் கண்காணித்து அதனை சரி செய்ய நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு அந்தக்குழு சென்றுள்ளது. இன்னும் எவ்வளவு சேதம் என்ற விவரம் தெளிவாகத் தெரியவில்லை.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…