ஜெர்மனியில் உள்ள மொஞ்சங்கடபெஸ் என்ற இடத்தில் வசித்து வந்தவர் எபெர்ஹார்ட் என்ற 62 வயதுடைய முன்னாள் அறிவியலாளர் ஆவார்.இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது வயதின் காரணமாக வேலையை இழந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் சும்மாவே இருந்ததால் கையில் சேமித்து வைத்திருந்த பணம் முழுவதையும் சுற்றுலா சென்று செலவு செய்துள்ளார்.பின்னர் கையில் வைத்திருந்த பணம் முழுவதும் தீர்ந்ததன் காரணாமாக வேறு வழியில்லாமல் காரிலேயே வசித்து வந்துள்ளார்
பின்னர் அவரின் ஓட்டுநர் உரிமையும் காலாவதியானதன் காரணமாக இனி நம்மால் ஏதும் செய்ய முடியாது என்ற காரணத்தால் ஏதாவது குற்றம் செய்துவிட்டு பேசாமல் சிறைக்கு சென்றிடலாம் என்று எண்ணியுள்ளார்.
இதன் காரணமாக சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு நபரை காரை வைத்து இடித்துள்ளார். இந்நிலையில் அந்த நபர் காயங்கள் ஏற்பட்டதன் காரணமாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் எபெர்ஹார்ட்டை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.பின்னர் எதற்காக இவ்வாறு செய்தீர்கள் என்று நீதிபதி எபெர்ஹார்ட்டை விசாரித்துள்ளார்.
அதற்கு எபெர்ஹார்ட் என்னால் இனி எதுவும் செய்ய முடியாது ஏதாவது குற்றம் செய்துவிட்டு உள்ளே வந்து ஆயுள் கைதியாக இருந்திடலாம் என்ற எண்ணத்திலேயே இவ்வாறு செய்தேன் என்று கூறியுள்ளார்.
இதன் காரணமாக நீதிபதி எபெர்ஹார்ட்க்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். ஆனால் பொதுவாக ஆயுள் தண்டனை விபத்தில் யாரேனும் இறந்துவிட்டால் மட்டுமே விபத்து ஏற்படுத்தியவருக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…