Pakistan Traders Protest [Image source : AN Photo]
பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக எரிசக்தி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக பாகிஸ்தான் வர்த்தகர்கள் நேற்று கராச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கராச்சி துறைமுகத்திற்கு அருகில் மேமன் மசூதிக்கு முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு வணிகர் கூட்டமைப்பினர் இந்த போராட்டத்தை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 வர்த்தக சங்கங்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் விலையேற்றம் தொடர்ந்தாலோ, பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்தாலோ போராட்டத்தை தொடரப்போவதாகவும் வணிகர்கள் கூறியுள்ளனர்.
மின்சாரம் மற்றும் எரிபொருளின் விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதால், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களால் தாங்க முடியாத அளவுக்கு விலையேற்றம் ஏற்பட்டுள்ளது என்று போராட்டத்தில் பங்கேற்ற வணிகர்கள் கூறினார். மேலும், அதனால்தான் வணிகத்தைப் பாதுகாக்க நாங்கள் போராட்டத்தை தொடங்கினோம். என கூறியுள்ளனர்.
வணிகர்கள் போராட்டத்தை போலவே, பாகிஸ்தான் பொதுமக்களும் அதியவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…