Hamas militants killed [File Image]
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே 5-வது நாளாக போர் தீவிரமடைந்து உள்ளது. ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் தரப்பும் பதில் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இஸ்ரேல் ராணுவமானது அமெரிக்கா உதவியுடன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் ராணுவம் காஸாவை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், காசாவிற்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நிலையில், காசாவிற்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதோடு, உணவு மற்றும் எரிபொருள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காஸாவில் இருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளனர்.
இஸ்ரேல் – காசா இடையே நடைபெற்ற மோதலில் இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், தற்போது ஹமாஸ் அமைப்பின் இணையவழி பணபரிமாற்றங்களை முடக்கியுள்ளதாக இஸ்ரேல் பொலிஸ் அறிவித்துள்ளது.
அதன்படி, ஹமாஸின் கிரிப்டோகரன்சி தளத்தையும் முடக்கி உள்ளதாக அறிவித்துள்ளது. சைபர் பிரிவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து, பைனான்ஸ் கிரிப்டோ பரிமாற்றத்தின் உதவியுடன் இந்த கணக்குகளை கண்டுபிடித்து முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தங்களின் இந்த நடவடிக்கையால் ஹமாஸின் 90% நிதி ஆதாரங்கள் முடக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. ஆனால், எத்தனை கணக்குகள் முடக்கப்பட்டன, கைப்பற்றப்பட்ட கிரிப்டோவின் மதிப்பு பற்றிய கூடுதல் விவரங்களை பற்றி வெளியிடவில்லை.
மேலும், நேற்று இரவு இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தகவல் அளித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் காசா மீது நேற்று தொடங்கிய வான்வழி தாக்குதல் 18 மணிநேரமாக தொடர்ந்து வருகிறது.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…