உலகம்

ஹமாஸ் அமைப்பின் நிதி ஆதாரங்கள் முடக்கம் – இஸ்ரேல் பொலிஸ்!

Published by
லீனா

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே 5-வது நாளாக போர் தீவிரமடைந்து உள்ளது. ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் தரப்பும் பதில் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இஸ்ரேல் ராணுவமானது அமெரிக்கா உதவியுடன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் ராணுவம் காஸாவை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், காசாவிற்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நிலையில், காசாவிற்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதோடு, உணவு மற்றும் எரிபொருள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காஸாவில் இருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளனர்.

இஸ்ரேல் – காசா இடையே நடைபெற்ற மோதலில் இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், தற்போது ஹமாஸ் அமைப்பின் இணையவழி பணபரிமாற்றங்களை முடக்கியுள்ளதாக இஸ்ரேல் பொலிஸ் அறிவித்துள்ளது.

அதன்படி, ஹமாஸின் கிரிப்டோகரன்சி தளத்தையும் முடக்கி உள்ளதாக அறிவித்துள்ளது.  சைபர் பிரிவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து, பைனான்ஸ் கிரிப்டோ பரிமாற்றத்தின் உதவியுடன் இந்த கணக்குகளை கண்டுபிடித்து முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தங்களின் இந்த நடவடிக்கையால் ஹமாஸின் 90% நிதி ஆதாரங்கள் முடக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. ஆனால், எத்தனை கணக்குகள் முடக்கப்பட்டன, கைப்பற்றப்பட்ட கிரிப்டோவின் மதிப்பு பற்றிய கூடுதல் விவரங்களை பற்றி வெளியிடவில்லை.

மேலும்,  நேற்று இரவு இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தகவல் அளித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் காசா மீது நேற்று தொடங்கிய வான்வழி தாக்குதல் 18 மணிநேரமாக தொடர்ந்து வருகிறது.

Published by
லீனா

Recent Posts

பாமகவிலிருந்து 3 எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்! என்ன காரணம்?

சென்னை : பாமக (பாட்டாளி மக்கள் கட்சி) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி,…

25 minutes ago

பசிபிக் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

ஹவாய் : ஜூலை 20 அன்று, வடக்கு பசிபிக் கடல் பகுதியில் ரிக்டர் அளவில் 7.4 என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

1 hour ago

மீண்டும் மீண்டுமா? இரண்டாவது முறையாக கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

அமெரிக்கா : தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம் செஸ் வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் செஸ்…

2 hours ago

இனிமே இதில் ChatGPT போன்ற AI பயன்படுத்தக் கூடாது! கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்க்கவோ அல்லது தயாரிக்கவோ ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகளைப் பயன்படுத்தக் கூடாது…

3 hours ago

“ஒட்டு கேட்கும் கருவி விவகாரத்தில் சந்தேகம்” – பாமக நிறுவனர் ராமதாஸ்

விழுப்புரம் : மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக…

4 hours ago

INDvsENG : இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி : காயம் காரணமாக விலகும் அர்ஷ்தீப் சிங்?

மான்செஸ்டர் : 2025 ஜூலை 20 அன்று, இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், இங்கிலாந்துக்கு…

5 hours ago