Categories: உலகம்

G20 : வளமான நாட்டிற்கு மனித உரிமைகளும், பத்திரிகை சுதந்திரமும் முக்கியம்.! பிரதமர் மோடியிடம் கூறிய அமெரிக்க அதிபர்.!

Published by
மணிகண்டன்

கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமை தலைநகர் டெல்லியில்  ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் என பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஜி20 நாட்டு தலைவர்கள் கூட்டமைப்பு முடிந்து நாடு திரும்பிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜி20 கூட்டமைப்பு குறித்தும், அதில் பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்தும் பேசினார். வியட்நாமில் இதுகுறித்து பேசிய ஜோ பைடன்,  , ‘பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்ற G20 மாநாட்டில் சிறப்பான விருந்தோம்பல் அளிக்கப்பட்டது. இதற்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி வருகை புரிந்தார். அப்போதும், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து அவரும் நானும் ஆலோசனை நடத்தியுள்ளோம்.  நான் எப்போதும் போல, மனித உரிமைகளை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், வளமான நாட்டைக் கட்டமைக்க மனித வளம் மற்றும் பத்திரிகையாளர்களின் சுதந்திரம் ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன என்பதை நான் கூறினேன் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

ஜி20 உச்சி மாநாட்டின் போது இந்தியாவுடனான வணிக பேச்சுவார்த்தை பற்றியும் ஜோ பைடன் பேசினார். மேலும் , அமெரிக்காவின் உலகளாவிய தலைமையானது உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு மிகவும் முக்கியமான சவால்களைத் தீர்க்கும் வகையில் உள்ளது என்றும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ராமதாஸ் vs அன்புமணி : தனித்தனியாக கூட்டத்தை நடத்துவதால் நிர்வாகிகள் குழப்பம்!

சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும்…

19 minutes ago

இனிமே வரிகட்டணும்… ஜப்பான், தென்கொரியப் 25 % வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…

44 minutes ago

மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்யணும் – உத்தரவு போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்! என்ன காரணம்?

மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…

1 hour ago

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…

11 hours ago

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

12 hours ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

12 hours ago