Thailand death [Image source : file image ]
வடக்கு தாய்லாந்தில் பள்ளியின் மீது ஒரு உலோக மேற்கூரை இடிந்து விழுந்ததில், 4 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். தாய்லாந்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், நேற்று பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
இந்த நிலையில், தாய்லாந்தின் பிஜிட் மாகாணத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்த காரணத்தால் அச்சம் அடைந்த மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் என ஏராளமானோர் அங்குள்ள பள்ளி ஒன்றின் வளாகத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் சென்று தஞ்சமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, அப்போது மிகவும் வேகமாக மழையுடன் சூறைக்காற்று அங்கு வீசிய காரணத்தால் அங்கு போடப்பட்டிருந்த உலோககூரை கீழே விழுந்தது, இதனால் மழைக்கு தஞ்சமடைந்த ஏராளமானோர் அதன் அடியில் சிக்கிக்கொண்டனர்.
மேலும், இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்பு பணிக்கு தகவல் கொடுத்த நிலையில், மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கிட்டத்தட்ட விடிய விடிய நடைபெற்ற இந்த மீட்பு பணியில் 4 குழந்தைகள் உள்பட 7 பேரின் உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளது. உலோக மேற்கூரை இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…