Thailand death [Image source : file image ]
வடக்கு தாய்லாந்தில் பள்ளியின் மீது ஒரு உலோக மேற்கூரை இடிந்து விழுந்ததில், 4 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். தாய்லாந்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், நேற்று பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
இந்த நிலையில், தாய்லாந்தின் பிஜிட் மாகாணத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்த காரணத்தால் அச்சம் அடைந்த மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் என ஏராளமானோர் அங்குள்ள பள்ளி ஒன்றின் வளாகத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் சென்று தஞ்சமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, அப்போது மிகவும் வேகமாக மழையுடன் சூறைக்காற்று அங்கு வீசிய காரணத்தால் அங்கு போடப்பட்டிருந்த உலோககூரை கீழே விழுந்தது, இதனால் மழைக்கு தஞ்சமடைந்த ஏராளமானோர் அதன் அடியில் சிக்கிக்கொண்டனர்.
மேலும், இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்பு பணிக்கு தகவல் கொடுத்த நிலையில், மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கிட்டத்தட்ட விடிய விடிய நடைபெற்ற இந்த மீட்பு பணியில் 4 குழந்தைகள் உள்பட 7 பேரின் உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளது. உலோக மேற்கூரை இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…