ரஷ்ய தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வண்ணம், ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அலுவலகம் மனிதாபிமான உதவி இணையதளத்தைத் தொடங்கியுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போர்
கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யா உக்ரைனில் பல முக்கிய நகரங்களை கைப்பற்றி உள்ளது. மேலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உக்ரேனில் இருந்து அகதிகளாக பிற நாடுகளுக்கு சென்றுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
தொடரும் தாக்குதல்
இந்த தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்திய பாடில்லை. உலகநாடுகள் ரஷ்யாவிடம் தாக்குதலை நிறுத்துமாறு அறிவுறுத்தி வரும் நிலையில் அதற்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
மனிதாபிமான உதவி இணையதளம்
இந்நிலையில், ரஷ்ய தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வண்ணம், ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அலுவலகம் மனிதாபிமான உதவி இணையதளத்தைத் தொடங்கியுள்ளது. உக்ரைனின் உள்ளூர் ஊடகமான தி கிய்வ் இன்டிபென்டன்ட், “ஜனாதிபதியின் அலுவலகம் மனிதாபிமான உதவி இணையதளத்தை அறிமுகப்படுத்துகிறது. அதிகாரப்பூர்வ இணையதளமான http://help.gov.ua மனிதாபிமான உதவியை எப்படி அனுப்புவது மற்றும் யாருக்கு அனுப்புவது என்பதைக் கண்டறிய உதவுகிறது. போர்டல் தொடர்புகளையும் வழங்குகிறது என தெரிவித்துள்ளது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…