Categories: உலகம்

நான் 10 பேரை என் கைகளால் கொன்றேன்..! ஹமாஸ் பயங்கரவாதி பேசிய ஆடியோவை வெளியிட்ட ஐடிஎஃப்.!

Published by
செந்தில்குமார்

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து 19 நாட்களாக மத்திய கிழக்கில் உள்ள நாடான இஸ்ரேல் மற்றும் தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவில் இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலிருந்தும் குழந்தைகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே நடைபெற்று போரில் இதுவரை காசாவில் 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதில் 2,055 குழந்தைகள், 1,119 பெண்கள், 217 முதியவர்கள் என்று கூறப்படுகிறது. அதோடு 15,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கு மத்தியில் 1,500 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களில் 830 பேர் குழந்தைகள் எனவும் காசா சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தற்போது ஹமாஸ் பயங்கரவாதி பயங்கரவாதி ஒருவர் காசா எல்லைக்கு அருகில் உள்ள கிபுட்ஸ் என்ற இடத்தில் மெஃபல்சிம் என்ற இடத்தில் கொலை செய்த யூத பெண்ணிடம் இருந்து திருடிய போனில் இருந்து தனது பெற்றோருக்கு போன் செய்து, ‘நான் 10 பேரை என் கைகளால் கொன்றேன்’ என்று கூறியுள்ளார்.

இந்த உரையாடலை இஸ்ரேல் தற்காப்புப் படை (IDF) வெளியிட்டுள்ளது. அந்த உரையாடலில், ” உங்கள் மகன் யூதர்களைக் கொன்றுள்ளேன். என் கைகளாலையே எவ்வளவு பேரைக் கொன்றேன் என்று பாருங்கள். நான் என் கைகளால் 10 பேரைக் கொன்றேன். நான் கொன்றவர்களின் புகைப்படங்களை உங்களுக்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பியுள்ளேன். அதைப் பாருங்கள்.” என்று பெருமையுடன் கூறியுள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 hour ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

3 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

7 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

8 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

10 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

10 hours ago