Ajay Banga chosen as president of the World Bank! Photographer: Hollie Adams/Bloomberg
உலக வங்கியின் அடுத்த தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்கா உறுதி செய்யப்பட்டுள்ளார்.
உலக வங்கியின் அடுத்த தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்கா (வயது 63) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதுவரை உலக வங்கியின் தலைவர் பதவிக்கு போட்டியிட அஜய் பங்கா மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், போட்டியின்றி தேர்வானார். உலக வங்கியின் தலைவராக அஜய் பங்காவை உலக வங்கி நிர்வாக இயக்குனர்கள் ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர்.
உலக வங்கியின் அடுத்த தலைவராக தேர்வாகியுள்ள அஜய் பங்கா 5 ஆண்டுகள் பதவி வகிப்பார் என கூறப்படுகிறது. மேலும், உலக வங்கியின் தலைவராக ஜூன் மாதம் 2-ஆம் தேதி பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சேர்ந்த அஜய் பங்கா, மாஸ்டர்கார்டு நிறுவனத்தில் தலைவராக பதவி வகித்தவர்.
தற்போது அவர் அமெரிக்காவின் ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவராக பொறுப்பு வகிக்கிறார். அஜய் பங்காவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தது.மேலும், உலக வங்கியின் தலைவராக அஜய் பங்காவை அமெரிக்க அரசால் பரிந்துரைக்கப்படுவார் என்று அதிபர் ஜோ பைடன் கடந்த பிப்ரவரியில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…