புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயர்கள் வைப்பது மாடர்ன் பழக்கமாக மாறியுள்ளது.அதாவது,பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு திரைப்படங்கள்,இடங்கள், தனித்துவமான விஷயங்கள்,கார்ட்டூன் கதாபாத்திரங்கள் மற்றும் எண்கள் போன்றவற்றின் பெயர்களை சூட்டி வருகின்றனர்.
அந்த வரிசையில்,இந்தோனேசியாவில் வசிக்கும் ஸ்லேமெட் யோகா என்பவர் தனது குழந்தைக்கு வித்தியாசமாக பெயர் சூட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்,ஸ்லாமெட் யோகாவின் மனைவி ரிரின் லிண்டாவிற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.குழந்தைக்கு பெயர் வைக்கும் பொறுப்பை யோகவே எடுத்துக்கொண்டு தனது குழந்தைக்கு ‘டிபார்ட்மெண்ட் ஆஃப் ஸ்டாட்டிஸ்டிகள் கம்யூனிகேசன் (புள்ளிவிவர தொடர்புத் துறை)’ என்று பெயரைச் சூட்டினார்.அதற்குக்காரணம் யோகா, 2009 இல் இந்தோனேசிய சிவில் சேவையில் நுழைந்து அரசு ஊழியராக பணியாற்றியுள்ளார்.அதன் பின்னர் புள்ளிவிவர தகவல் தொடர்புத்துறையில் பல ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வந்துள்ளார்.அதன் காரணமாகவே தனது குழந்தைக்கு 38 எழுத்துக்கள் கொண்ட வித்தியாசமான இப்பெயரை வைத்துள்ளார்.
மேலும்,தனது மகன் ‘பக்தியுள்ளவனாகவும்,தன் குடும்பத்தை சிறப்பாக கவனித்துக் கொள்பவனாகவும் வளருவான்’ என்று யோகா கூறினார்.
ஸ்லாமெட் யோகா, தனது குழந்தைக்கு வைத்துள்ள இந்த வித்தியாசமான பெயரால் சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…