turtles attack [Image source : file image ]
உலகத்தில் இருக்கும் பல விலங்குகளுக்கு விசித்திரமான குறும்புகளால் நம்மை மகிழ்வித்து வருகிறது என்றே கூறலாம். இதனால் பலருக்கும் விலங்குகள் பிரியம். மேலும், சில விலங்குகள் செய்யும் ஒரு சில பயங்கரமான செயல்களால் ஒட்டுமொத்த விலங்குகள் மீதும் பயம் வருகிறது.
அந்த வகையில், சமீபத்தில் ஒரு பெண் தண்ணீர் கொடுக்கும் போது ஆமை அவரை தாக்கிய சம்பவத்தை எதிர்கொண்டார். இது தொடர்பான நெஞ்சை பதற வைக்கும் வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
ட்விட்டரில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ” ஆமை ஒன்று வெப்ப நிலை தாங்காமல் தண்ணீருக்காக காத்திருந்துள்ளது. இதனை பார்த்த ஒரு பெண் பாட்டில் மூலம் தண்ணீரை கொடுக்கிறார். அதனை வேகமாக அந்த ஆமையும் குடிக்கிறது. இதன் மூலமே அது எவ்வளவு தாகமாக இருக்கிறது என தெரிகிறது .
ஆமைக்கு தண்ணீர் கொடுத்த பெண் “அவனுக்கு ரொம்ப தாகமா இருக்கு பாரு” என்று வீடியோவில் கூறுகிறார். சில வினாடிகளுக்குப் பிறகு, தண்ணீர் வழங்குவதை நிறுத்தி, அதை விலங்குகளின் முகத்தில் ஊற்றினார். இதைச் செய்தவுடன், ஆமை வாயைத் திறந்து அந்தப் பெண்ணின் மீது தாக்குதல் நடத்துகிறது. அதிர்ஷ்டவசமாக, இடையில் வேலி இருந்த காரணத்தால் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தண்ணீர் கொடுத்தது ஒரு குத்தமா..? என நகைச்சுவையாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…