israel hamas ceasefire [Image source : Reuters]
இஸ்ரேல் – ஹமாஸ் போரானது கடந்த அக்டோபர் மாதம் துவங்கி 50 நாட்கள் கடந்து நடைபெற்று வந்தது. இதில் இஸ்ரேல் தரப்பில் 1400 பேரும், காசா நகரில் 14000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் உயிரிழந்தனர். இரு தரப்பில் இருந்தும் பலர் பிணை கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர்.
இஸ்ரேல் ஹமாஸ் போரை நிறுத்த கோரி பல்வேறு நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அமெரிக்கா, எகிப்து , கத்தார் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தலம் செய்த பிறகு 4 நாட்கள் போர் நிறுத்ததிற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
நீடிக்கும் போர் நிறுத்தம்… 30 பாலஸ்தீன கைதிகள், 12 இஸ்ரேல் பிணைக் கைதிகள் விடுவிப்பு.!
இருந்தும் குறிப்பிட்ட அளவிலான பிணைக் கைதிகள் இருதரப்பில் இருந்தும் விடுவிக்கும் வரை இந்த போர் நிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இது தற்காலிக நிறுத்தம் மட்டுமே. மீண்டும் போர் துவங்கும் என்ற முடிவில் தான் இஸ்ரேல் ராணுவமும், ஹமாஸ் அமைப்பினரும் உள்ளனர்.
4 நாட்கள் போர் நிறுத்தத்திற்க்கு பின்னர் கத்தார் நாட்டின் மத்தியஸ்தலம் செய்ததன் காரணமாக மேலும் 2 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. தற்போது இன்றோடு போர் நிறுத்தம் முடியும் தருவாயில் நாளை ஒருநாள் 7வது நாளாக மீண்டும் போர் நிறுத்தம் என இஸ்ரேல் ராணுவத்தினரும் , ஹமாஸ் அமைப்பினரும் அறிவித்துள்ளனர்.
6ஆம் நாள் வரையில், இஸ்ரேல் பிணைக் கைதிகள் 60கும் மேற்பட்டோரும், பாலஸ்தீனிய சிறை கைதிகள் 180 பேரும் விடுவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று (வியாழன்) மேலும் 10 இஸ்ரேல் பிணை கைதிகளை ஹாமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். அவர்கள் அனைவரும் முகமூடி அணிந்து காசா -எகிப்து எல்லையில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைப்பட்டனர்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…