US President Joe Biden [File Image]
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஹமாஸ் அமைப்பு , இஸ்ரேல் மீது போர் தொடுத்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து 20 நாட்களாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ராணுவ உதவிகளை செய்து வருகிறது. அதே போல, ஹமாஸ் அமைப்புக்கு மறைமுக ஆதரவை ஈரான் அளித்து வருகிறது. இதனால், ஈரான் – அமெரிக்கா இடையேயும் தொடர் பனிப்போர் நிலவி வருகிறது.
காசாவில் நுழைந்து தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் ராணுவம்!
இந்த விவகாரம் குறித்து, அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி அண்மையில் கூறுகையில், கடந்த வாரத்தில் ஈராக்கில் 12 முறையும், சிரியாவில் 4 முறையும் அமெரிக்க படைகள் தாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்கப் படைகள் தொடர்ந்து குறிவைக்கப்பட்டால், அமெரிக்கா பதிலளிக்கும் என்று ஈரான் முக்கிய தலைவர் அயதுல்லாவை எச்சரித்ததாகக் கூறினார்.
ஜான் கிர்பி மேலும் கூறுகையில், அய்யதுல்லாவுக்கு ஜோ பைடனின் எச்சரிக்கை என்னவென்றால், அவர்கள் அமெரிக்கர்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதலை நகர்த்தினால் நாங்கள் பதிலடி கொடுப்போம். அதற்க்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும். அமெரிக்க பதிலடிக்கும் இஸ்ரேலுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் ஜான் கிர்பி தெரிவித்தார்.
ஆனால் , அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஈரான் தலைவர் அய்யதுல்லாவுக்கு எவ்வாறு தனது எச்சரிக்கை செய்தியை தெரிவித்தார் என்ற முழு விவரத்தை அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவிக்கவில்லை.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…