Categories: உலகம்

அமைச்சரவை ஒப்புதல்.! 4 நாள் போர் நிறுத்தம் – இஸ்ரேல் அறிவிப்பு.!

Published by
மணிகண்டன்

இஸ்ரேல – ஹமாஸ் இடையான போர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கி 40 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் இஸ்ரேல் மக்கள் 1400 பேர் உயிரிழந்ததாகவும்.காசா நகரில் உள்ள பலஸ்தீன மக்கள் சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இஸ்ரேல – ஹமாஸ் இடையான போர் காரணமாக காசா நகரில் வாழும் மக்கள் தான் அதிக உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகளை அடைந்துள்ளனர் என கூறி போரை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள் வலியுறுத்தினர்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர்.. பிரிக்ஸ் நாடுகள் இன்று விவாதம்.!

ஆனால், ஹமாஸ் அமைப்பு முற்றிலும் அழியும் வரையில் போர் நிறுத்தம் இல்லை என் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளிப்படையாக அறிவித்தார். ஹமாஸ் தரப்பும் இஸ்ரேலை சேர்ந்த பணையக்கைதிகளை இன்னும் விடுவிக்காமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், பணயக்கைதிகளை விடுவிக்க 4 நாள் போர் நிறுத்தப்படுவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார். இது தொடர்பான வாக்கெடுப்பு இஸ்ரேல் அமைச்சரவையில் நடைபெற்றது. அதில், இஸ்ரேல் அமைச்சரவையில் 4 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதாவது, ஹமாஸிடம் பணயக்கைதிகளாக உள்ள 50 பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிக்கவே இந்த போர்நிறுத்தம் எனவும், இது போர் முற்றிலும் நிறுத்துவதற்கான அறிகுறி இல்லை எனவும், எங்கள் இலக்கான ‘ஹமாஸ் ‘ முற்றிலும் அழியும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

நாளை (வியாழன்) அல்லது நாளை மறுநாள் (வெள்ளி) முதல் ஒரு நாளைக்கு 10 பணயக்கைதிகள் வீதம் ஒவ்வொரு நாளும் இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவர் என்றும், அதுவரையில் போர் நிறுத்தம் எனவும் இஸ்ரேல் ராணுவ அதிகாரி.தெரிவித்துள்ளார்.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

11 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

14 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

17 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

18 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

20 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

20 hours ago