Hamas militants killed [File Image]
ஹமாஸ் படையினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 313ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மோதல் நீடித்து வருகிறது. இஸ்ரேல் மீது ஹமாஸ் முன்னோடியில்லாத வகையில் பெரிய அளவிலான தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று இஸ்ரேல் ராணுவம் பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளது.
நேற்று (சனிக்கிழமை) காசா பகுதி வழியாக பாலஸ்தீன தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் மீண்டும் தொடங்கியுள்ளது.
இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், காசா பகுதியைக் கட்டுப்படுத்தும் பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் படையினர் மீது, கடுமையாக தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, இஸ்ரேல் ராணுவம் இன்று தெற்கு இஸ்ரேல் மற்றும் காசா பகுதியில் வான்வழித் தாக்குலில் ஈடுபட்டு வருகிறது. இன்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இதுவரை 313 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், காசாவில் பிடிபட்ட இஸ்ரேல் மக்கள் மற்றும் வீரர்களையும் ஹமாஸால் இயக்கத்தினர் பிணைக் கைதிகளாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2023-24 நிதியாண்டில் மொத்தமாக எவ்வளவு கோடி இலாபம் ஈட்டியுள்ளது என்பதற்கான விவரத்தை…
டெல்லி : கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவைப் பற்றிய மெட்டாவின் ஃபேஸ்புக் தானியங்கி மொழிபெயர்ப்பு பிழையால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது கால்களில் ஏற்பட்ட வீக்கத்தை அடுத்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில்,…
சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில்…
காசா : கடந்த இரண்டு ஆண்டுகளாக தினமும் சராசரியாக 28 குழந்தைகள் காசாவில் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள்…