Categories: உலகம்

இந்திய தேர்தலை சீர்குலைக்க சீனா முயற்சி.? பகீர் கிளப்பும் மைக்ரோஃசாப்ட்.!

Published by
மணிகண்டன்

Election2024 :  இந்திய தேர்தலை AI தொழில்நுட்பம் மூலம் சீனா சீர்குலைக்க நினைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்குமான பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரையில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலை நியாமான முறையில் நடத்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன. வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன், வாக்கு இயந்திர ஒப்புகை சீட்டையும் கணக்கில் கொண்டு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் வந்து கொண்டு இருக்கின்றன.

இப்படியான சூழலில் தான், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஓர் அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா உட்பட உலகில் பல்வேறு நாடுகளில் நடைபெறும் தேர்தல்களில் சீனா, செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி அதில் குளறுபடி ஏற்படுத்த உள்ளது என எச்சரித்துள்ளது.

முதலில், தைவானில் இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சீனா இதற்கான சோதனை ஓட்டத்தை நடத்தியது என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது.  செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட மென்பொருள் மூலம்  இந்தியா, அமெரிக்கா மற்றும் தென் கொரியாவில் நடைபெறவுள்ள தேர்தல்களை சீர்குலைக்க சீனா தயாராகி வருவதாக மைக்ரோசாப்ட் எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும், ஐரோப்பிய யூனியனைத் தவிர, சுமார் 64 நாடுகளில் இந்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளது.

மைக்ரோசாப்ட் புலனாய்வு குழுவின் அறிக்கைபடி, சீன அரசின் ஆதரவு பெற்ற சைபர் குழுக்கள், வட கொரியாவின் ஈடுபாட்டுடன், 2024இல் திட்டமிடப்பட்ட பல்வறு நாட்டு பொதுத்தேர்தல்களை இலக்காகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.   இந்த தேர்தல்களின் போது சீனாவின் நலன்களுக்கு ஆதரவாக உள்ள அரசுகளை தேர்ந்தெடுக்க முயற்சி செய்யும் என்றும் கூறப்படுகிறது.

Recent Posts

அமெரிக்காவின் டெக்சாஸை புரட்டிப்போட்ட வெள்ளம்.., 28 குழந்தைகள் உட்பட 80 பேர் பலி.!

டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…

2 hours ago

கோவையில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.!

கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.  இன்று (ஜூலை 7,…

3 hours ago

தமிழ்நாடு பிரீமியர் லீக்.., முதல்முறை கோப்பை வென்ற திருப்பூர் அணி.!

சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…

4 hours ago

“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…

4 hours ago

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. மகளிர் உரிமைத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பம்.!

சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…

4 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!

பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…

4 hours ago