Nepal - helicopter [file image]
நேபாளத்தில் காணாமல் போன ஹெலிகாப்டர் எவரெஸ்ட் சிகரத்தில் மோதி நொறுங்கியது.
ஐந்து வெளிநாட்டவர்கள் உட்பட 6 பேரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இன்று நேபாளத்தின் சோலுகும்பு மாவட்டத்தில் இருந்து இருந்து காத்மாண்டு தலைநகரம் நோக்கி பயணித்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து காணாமல் போனது. இந்நிலையில், காணாமல் போன ஹெலிகாப்டரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
தற்போது, 6 பேருடன் சென்ற அந்த ஹெலிகாப்டர், எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகே விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேடுதல் பணியில் 5 பயணிகள் சடலங்கள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விமானத்தில் இருந்த ஒருவர் இன்னும் காணவில்லையாம், காணாமல் போன நபரை தேடும் பணி இப்பொது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உலகின் மிக உயரமான சிகரத்தை பார்வையிடுவதற்காக ஐந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்துக்கொண்டு இன்று காலை தலைநகர் காத்மாண்டுவுக்கு திரும்புகையில் இந்த சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மெக்சிகோ நாட்டவர்கள் என்றும், விமானி நேபாளர் என்றும் சொல்லப்படுகிறது.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…