Hostages [file image]
230க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மக்களை பணயக் கைதிகளாக வைத்திருக்கும் ஹமாஸ், மூன்று பெண் பணயக் கைதிகள் பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த 7ஆம் தேதி தொடங்கி 3 வாரங்களை கடந்து இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதனிடையே இருதரப்பும் போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் தாக்குதல் அதிகரித்து வருவதால் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.
இந்த நிலையில், நேற்றைய தினம் ஹமாஸால் வெளியிட்ட ஒரு வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அக்டோபர் 7 ஆம் தேதி தாக்குதல்களின் போது, ஹமாஸால் பிடிப்பட்ட மூன்று இஸ்ரேல் பெண் பணயக் கைதிகள் அதிர்ச்சி தகவலை பகிர்ந்துகொண்டனர்.
அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள மூன்று இஸ்ரேல் பெண்களும் யெலினா ட்ருபனோப், டேனியல் அலோனி மற்றும் ரிமோன் கிர்ஷ்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும், பயங்கர குழுவான ஹமாஸ் தாக்குதலின் போது, இஸ்ரேலிய குடிமக்களைப் பாதுகாக்கத் தவறியதாகவும், ஹமாஸிடம் சிக்கியவர்களை மீட்டு வீடு திரும்ப உதவ தவறியதாகவும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பகிரங்க குற்றசாட்டை முன் வைத்துள்ளனர்.
குறிப்பாக, அந்த காணொலியில் போர்நிறுத்தம் செய்து பணயக்கைதிகளை மீட்கும் முயற்சியிலும் தோல்வியடைந்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அவர்களில் ஒருவர், எபிரேய மொழியில் பேசுகையில், இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீன பணயக் கைதிகள் அனைவரையும் விடுவித்து இஸ்ரேல் பணயக் கைதிகள் அனைவரையும் திரும்புபெறுமாறு நெதன்யாகுவை வலியுறுத்தியுள்ளார்.
இதையடுத்து, இந்த காணொளி குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இது ஹமாஸின் வாக்குறுதி உளவியல் பயங்கரவாதம் என்று கூறியுள்ளார்.
இஸ்ரேலிய வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களால் இதுவரை 8,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸின் தாக்குதலில் இஸ்ரேலில் 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக இஸ்ரேலிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இப்பொது, இரு தரப்பின் இறப்பு எண்ணிக்கை தற்போது 9,706 ஆக உள்ளது.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…