சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களில் முதல் கட்டமாக 278 பேர் ஜெட்டா நகருக்கு புறப்பட்டனர்.
சூடானில் இருந்து இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் காவேரி’ திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களில் முதல் கட்டமாக 278 பேர் ஜெட்டா நகருக்கு புறப்பட்டனர். அதன்படி, சூடானில் இருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு இந்திய கடற்படை கப்பல் சுமேதா மூலம் 278 இந்தியர்கள் புறப்பட்டனர்.
சூடான் நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவ ஆதரவு படையினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டு கடும் துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரங்கள் நடந்து வருகிறது. இந்த மோதலினால் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை இந்த மோதலில் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 3,351 பேர் காயமடைந்துள்ளதாகவும் (WHO) உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த மோதலுக்கு மத்தியில் சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை இந்தியா தொடங்கியுள்ளது. இந்த மீட்புப்பணிக்கு ஆபரேஷன் காவேரி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆபரேஷன் மூலம் சூடானில் சிக்கி தவித்த சுமார் 500 இந்தியர்கள் அந்நாட்டு துறைமுகத்தை ஏற்கனவே வந்தடைந்த நிலையில், தற்போது முதற் கட்டமாக 278 இந்தியர்கள் கப்பல் மூலம் ஜெட்டா நகருக்கு புறப்பட்டுள்ளனர்.
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…