பெல்ஜியம்: கூல் மின்ட் ரக மவுத் வாஷ் தினமும் பயன்படுத்தினால் அவர்களுக்கு புற்றுநோய் வரவழைக்கும் பாக்டீரியா அதிகம் பரவ வாய்ப்பு இருப்பதாக ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. பிரபல நிறுவனத்தின் மவுத் வாஷ்-ஐ தினமும் பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக பெல்ஜியம் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பெல்ஜியத்தை சேர்ந்த ஆண்ட்வெர்ப் வெப்பமண்டல மருத்துவ நிறுவனத்தை (Institute of Tropical Medicine in Antwerp, Belgium) சேர்ந்த ஆய்வாளர்கள் பிரபல கூல் மின்ட் நிறுவன மவுத் வாஷை சோதனைக்கு உட்படுத்தினர். […]
ரோம் : இத்தாலிக்கும் கிரீஸுக்கும் இடையில் மத்தியதரைக் கடலில் புலம்பெயர்ந்தவர்கள் பயணம் மேற்கொண்ட 2 கப்பல்கள் தெற்கு இத்தாலியில் வெவ்வேறு சம்பவங்களில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு சம்பவத்தில் 64 பேரைக் காணவில்லை, கடலில் இருந்து காப்பாற்றப்பட்ட 11 பேர் தெற்கு இத்தாலியின் ரோசெல்லா அயோனிகாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றொரு சம்பவத்தில் தெற்கு இத்தாலியின் மத்தியதரைக் கடலில் உள்ள பெலகி தீவுகளில் ஒன்றான லம்பேடுசா தீவி விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து புலம்பெயர்ந்தோர் […]
வடகொரியா: ரஷிய அதிபரான வ்லாதிமிர் புடின், 24 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வட கொரியாவுக்கு செல்லவிருக்கிறார். கடந்த 2000ம் ஆண்டுக்கு பின் முதல் முறையாக ரஷ்ய அதிபரான புடின் வட கொரியா நாட்டிற்கு பயணப்பட இருக்கிறார். மேலும், பயணத்தில் வடகொரியாவின் அதிபரான கிம் ஜோங் உன் உடன் நேரிடையான பேச்சுவார்த்தைக்கும் புடின் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. மேற்கத்திய நாடுகளின் பெரும் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள இந்த இரு நாடுகளும் (ரஷ்யா-வடகொரியா), நாட்டின் பாதுகாப்புக்காகவும் மற்றும் பொருளாதாரத்துக்காகவும் ஒத்துழைப்பை விரிவுபடுத்த […]
அமெரிக்கா : முகமூடி அணிந்த இருபது பேர் அமெரிக்காவில் புனேவைத் தலைமையிடமாகக் கொண்ட நகைக்கடையில் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. கலிபோர்னியாவின் சன்னிவேலில் இந்தியர் ஒருவருக்கு சொந்தமாக ‘பிஎன்ஜி ஜூவல்லர்ஸ்’ என்ற நகைக்கடை உள்ளது. அந்த நகைக்கடையில் ஒரே ஒரு பாதுகாவலர் மட்டும் நின்றுகொண்டு கையில் போனை வைத்து கொண்டு கடையை பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது கடையை நோட்டமிட்டு இருந்த 20 பேர் கொண்ட மர்ம கும்பல் கையில் சுத்தியலுடன் விறு […]
ஈக்வடார் : ஈக்வடாரில் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காணாமல் போயுள்ளனர் என்று ஈக்வடார் அதிகாரிகளின் முதற்கட்ட தகவலை தெரிவித்துள்ளார். குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. எனவே, இந்த பலத்த மழை காரணமாக நிலச்சரிவு, பாறை சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக பல நாடுகள் எச்சரிக்கவும் செய்து இருந்தார்கள். இதனையடுத்து, எல் சால்வடாரில், நாடு […]
சவூதி அரேபியா : கடும் வெப்ப அலையால் ஹஜ் புனிதப் பயணம் சென்ற ஜோர்டனைச் சேர்ந்த 14 பேர், ஈரானைச் சேர்ந்த 5 பேர் என 19 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்லாமியர்களின் ஸ்தாபகரான முஹம்மது நபியின் பிறப்பிடமான சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு முஸ்லிம்கள் மேற்கொள்ளும் வருடாந்திர புனித யாத்திரை தான் ‘ஹஜ்’ ஆகும். இந்த ஆண்டு சுமார் 1.8 மில்லியன் மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சவூதி அரேபியா, பாலைவனங்களுடன் கூடிய வெப்பமான […]
எலான் மஸ்க் : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும் எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கூறியுள்ளார். அமெரிக்காவின் போர்ட்டரிகோ நாட்டில் தேர்தல் நடந்தபோது, வாக்கு எண்ணிக்கை சரியாக இல்லை எனவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இந்த சூழலில், எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இதனை சுட்டிகாட்டும் விதமாக ” மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்கவேண்டும். ஏனென்றால், இந்த இயந்திரங்களை […]
பாகிஸ்தான் : பணவசதி இல்லாத பாகிஸ்தானில் பணவீக்கத்தால் விலைவாசி உயர்ந்துள்ளது. இதனால், அங்கிருக்கும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஈத் உல் அதா (பக்ரீத்) பண்டிகையை முன்னிட்டு, பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் (HSD) விலையை அந்நாட்டு அரசாங்கம் குறைத்துள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.10.20 குறைக்கப்பட்டு ரூ.258.16 ஆகவும், அதிவேக டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.33 என குறைக்கப்பட்டு ரூ.267.89 ஆக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை […]
டொனால்ட் ட்ரம்ப்: இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற்றால் வருமான வரி செலுத்துவதில் இருந்து விடுவிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றி பெரும் நோக்கில் குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்டு டிரம்ப் அமெரிக்க மக்கள் மீது சில வாக்குறுதிகளை அளித்து வருகிறார். அதில் வருகிற நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், அமெரிக்கா மக்களை வருமான வரி செலுத்துவதிலிருந்து விடுவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவின், […]
சீனா : சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் 80 வயது முதியவர் ஒருவர் 23 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். திரு லீ (80) என்ற முதியவர் முதியோர் இல்லத்தில் பணிபுரியும் இளம் பெண்ணான சியாஃபங் (23) மீது காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது. இருவரும் முதலில் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்த நிலையில், இறுதியில் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து திருமணம் செய்துகொண்டார்கள். காதலித்ததை தொடர்ந்து சியாஃபங் வீட்டில் கல்யாண […]
ஜி7 மாநாடு: ஜி7 அமைப்பின் 50-வது உச்சி மாநாடு இத்தாலியின் ஃபசானோ நகரில் நேற்று தொடங்கியது. ஜூன் 13 முதல் 15 வரை நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு இத்தாலிக்கு சென்றடைந்தார். சமீபத்தில், மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு மோடியின் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். இத்தாலியின் அபுலியா பகுதியில் நடைபெறும் ஜி7 அவுட்ரீச் அமர்வில், இத்தாலிய பிரதமர் மெலோனி தொகுத்து வழங்கும் ‘செயற்கை நுண்ணறிவு, ஆற்றல், […]
லண்டன் : உடலுறவின் போது ரகசியமாக ஆணுறையை கழற்றிய நபருக்கு நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெற்கு லண்டனில் உள்ள பிரிக்ஸ்டன் பகுதியில் வசித்து வரும் கை முகேந்தி (39) என்ற நபர் ஒரு பெண்ணுடன் உடலுறவு வைத்து கொள்ள நினைத்துள்ளார். ஆணுறை பயன்படுத்தி அந்த பெண் உடலுறவு கொள்ளவும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, உடலுறவின் போது, கை முகேந்தி ரகசியமாக ஆணுறையை கழற்றி உள்ளார். இதனை கண்ட அந்த பெண் சற்று அதிர்ச்சி அடைந்து காவல்துறையில் […]
குவைத்: குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பரிதாபமாக உயிரிழந்த 45 இந்தியர்களின் சடலங்கள் கொச்சிக்கு கொண்டு வரப்படுகிறது. குவைத் நாட்டில் உள்ள மங்காப் பகுதியில் அமைந்துள்ள ஒரு அடுக்கு மாடியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 45 இந்தியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50 பேர் மருத்துவனமானயில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்தது. இந்த தீ விபத்தில் பலியான 45 இந்தியர்களில் கேரளாவை சேர்ந்தவர்கள் 24 […]
பிரேசில்: பிரேசிலைச் சேர்ந்த பாலோ கேப்ரியல் டா சில்வா பாரோஸ் மற்றும் கட்யூசியா லீ ஹோஷினோ என்ற அழகான க்யூட் தம்பதியினர் தான் இந்த உலகத்தில் மிக குறுகிய தம்பதியினர் என்று சாதனை படைத்துள்ளனர். இதனால் இவர்கள் உலக கின்னஸ் புத்தகத்திலும் அங்கீகரிக்கபட்டுள்ளனர். கடந்த 2006ம் ஆண்டில் சந்தித்த இந்த காதல் ஜோடி, தங்கள் உறவை மேம்பபடுத்துவதற்கு 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வலுவான பிணைப்பில் இருந்துள்ளனர். மேலும் இந்த 15 வருடங்களில் சமூக அழுத்தங்களுக்கு அடி […]
குவைத் : தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் மாங்காஃப் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபருக்கு சொந்தமான அந்த குடியிருப்பில் 195 பேர் வசித்து வந்த நிலையில், நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியாவை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில், இறந்தவர்களின் விவரம் வெளிவராமல் இருந்த நிலையில், தற்போது ராமநாதபுரம் அடுத்த தென்னவனூர் பகுதியை சேர்ந்த கருப்பணன் ராமு என்பவர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலத்தில், தமிழர்கள் பலியான […]
குவைத் : நாட்டின் தெற்கு அஹ்மதி கவர்னரேட்டில் உள்ள மங்காப் பகுதியில் தமிழர்கள் உள்பட இந்தியாவைச் சேர்ந்த பலர் தங்கியுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் சமையல் அறையில் நேற்று (ஜூன் 12) திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 41 பேர் பலியானதாகவும், அதில் 2 தமிழர்கள் உள்பட 40 பேர் இந்தியர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விபத்தில் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ […]
குவைத் : அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து, குவைத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் மத்திய அரசு தொலைபேசியில் பேசி வருகிறது. குவைத் நாட்டில் குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் சிலர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபருக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் தமிழர்கள் உள்பட இந்தியாவைச் சேர்ந்த பலர் தங்கியுள்ளனர். இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் இதுவரை 41 பேர் பலியானதாகவும், அதில் 2 […]
குவைத் : குவைத்தின் அகுமதி ஆளுநரகம் பகுதியில் உள்ள ஆறு மாடிக் கட்டிடத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உடல் கருகி உயிரிழந்தனர் மற்றும் குறைந்தது 40 பேர் காயமடைந்தனர் என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் 2 தமிழர்கள், 5 மலையாளிகள் உட்பட 10 இந்தியர்கள் உயிரிழந்ததாக குவைத் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தக் கட்டடத்தில் வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்தான் பெரும்பாலும் தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது. சமையலறையில் ஏற்பட்ட தீ, கட்டிடத்தின் […]
பிடிஎஸ்: பிரபல பாடகர் குழுவான BTS குழுவின் மூத்த உறுப்பினரான ஜின் எனப்படும் கிம் சியோக்ஜின் 2 வருடங்களுக்கு பிறகு இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தென் கொரியா நாட்டின் பிரபலன பாடகர் குழு தான் பிடிஎஸ் (BTS) எனப்படும் பாடகர் குழு. 7 பேர் கொண்ட இந்த பாடகர் குழுவில் மூத்த உறுப்பினர் தான் ஜின். உலகெங்கிலும் இந்த பாடகர் குழுவிற்கு ரசிகர்கள் உள்ளனர், அதிலும் குறிப்பாக பெண்கள் தான் இந்த பாடகர் குழுவிற்கு தீவிர ரசிகர்களாக இருந்து […]
புதுடெல்லி : உக்ரைனுடனான மோதலின் போது, ரஷ்ய இராணுவத்தால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மேலும் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இத்துடன் அங்கு இந்தியர்கள் உயிரிழப்பு 4ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக, ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்த மோதலில் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹைதராபாத்தை சேர்ந்த முகமது அஸ்ஃபான் என்ற 30 வயது நபர் மார்ச் மாதம் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த ஹெமில் அஷ்வின்பாய் மங்குகியா என்ற 23 வயது […]