மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்கணும்! எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு!

எலான் மஸ்க் : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும் எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கூறியுள்ளார். அமெரிக்காவின் போர்ட்டரிகோ நாட்டில்

elon musk rahul gandhi

எலான் மஸ்க் :மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும் எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கூறியுள்ளார். அமெரிக்காவின் போர்ட்டரிகோ நாட்டில் தேர்தல் நடந்தபோது, வாக்கு எண்ணிக்கை சரியாக இல்லை எனவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இந்த சூழலில், எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இதனை சுட்டிகாட்டும் விதமாக ” மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்கவேண்டும். ஏனென்றால், இந்த இயந்திரங்களை மனிதர்கள் அல்லது செயற்கை நுண்ணறிவால் ஹேக் செய்யப்படும் சாத்தியங்கள் அதிகமாக இருக்கிறது” என கூறியுள்ளார். இவருடைய பதிவி வைரலாகி வருகிறது.

unknown node

எலான் மஸ்க் கூறிய  கருத்தை ஆதரித்திருக்கும் வகையில்,  காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் “இந்தியாவில் EVMகள் (மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்) ஒரு கருப்பு பெட்டி. அவற்றை யாரும் ஆராய அனுமதிக்கப்படுவதில்லை. நமது தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை குறித்து கடுமையான கவலைகள் எழுப்பப்படுகின்றன.நிறுவனங்கள் பொறுப்புக்கூறல் இல்லாதபோது ஜனநாயகம் ஒரு ஏமாற்று நாடகமாக மாறி, மோசடிக்கு ஆளாகிறது” என கூறியுள்ளார்.

unknown node