உலகம்

மோசமான ஓட்டுனர்கள் இந்தியா.! சிறந்த ஓட்டுநர்கள் ஜப்பான்.! வெளியான அதிர்ச்சி சர்வே.!

உலகில் மோசமான ஓட்டுனர்களை பெற்ற நாடுகளில் இந்தியா 4ஆம் இடம் பெற்றுள்ளது.  உலகளாவிய மக்கள் தொகை பெருக்கத்தினால், வாகனங்களின் எண்ணிக்கையும் அதனால் சாலை போக்குவரத்து நெரிசலும் அதிகமாகி கொண்டே செல்கிறது. இதனால் சாலை விபத்துகள் அதிகமாக நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக மெட்ரோ நகரங்களுக்கு மக்களின் நகர்வு அந்த நகரத்தின் போக்குவாரத்தை வெகுவாக பாதிக்கிறது. இதனை குறிப்பிட்டு பொது போக்குவரத்தை பயன்படுத்த அரசு பரிந்துரைத்து வருகிறது. இந்தியா : அண்மையில் தனியார் நிறுவனம் ஒன்று உலகளாவிய பொது போக்குவரத்து […]

4 Min Read
Default Image

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது- ஜோ பைடன்.!

போரில் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவால் வெற்றி பெற முடியாது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருடம் நிறைவடைகிற நிலையில், ரஷ்யாவால் ஒருபோதும் உக்ரைனை வெற்றி கொள்ள முடியாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஒரு சர்வாதிகாரி ஒருபோதும் மக்களின் சுதந்திர அன்பை அழிக்க முடியாது. உக்ரைனின் எதிர்காலத்தை பறிக்கும் முயற்சியில் ரஷ்யா போர் புரிந்தது. உக்ரைன் மக்கள் இன்னும் சுதந்திரமாக தான் இருக்கிறார்கள், இரண்டாம் உலகப்போருக்கு […]

3 Min Read
Default Image

இந்திய வம்சாவளியைச்சேர்ந்த விவேக் ராமசாமி, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி.!

அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச்சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிடுகிறார். இந்திய வம்சாவளியைச்சேர்ந்த குடியரசுக்கட்சியைச்சேர்ந்த விவேக் ராமசாமி, அமெரிக்காவில் அடுத்த ஆண்டு 2024 இறுதியில் நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான போட்டியில் களமிறங்குகிறார். குடியரசுக்கட்சியின் சார்பில் ஏற்கனவே முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவதாக அறிவித்திருந்த நிலையில், இந்திய-அமெரிக்கரான நிக்கி ஹேலியும் அவருக்கு எதிராக போட்டியிடுவதாக அறிவித்தார். தற்போது மற்றொரு இந்திய வம்சாவளியரான விவேக் ராமசாமி, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், வேட்பாளர்கள் […]

3 Min Read
Default Image

அதிர்ச்சி…ஒரே ஜாடையில் 60 குழந்தைகள்..! வசமாக சிக்கிய தந்தை..!

ஆஸ்திரேலியாவில் ஒரே ஜாடையில் 60 குழந்தைகள் பிறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆஸ்திரேலியாவில் உள்ள நபர் ஒருவர் போலியான பெயரில் பல முறை விந்தணுக்களை தானம் செய்துள்ளார். இதனால் ஒரே முக ஜாடையுடன் கூடிய 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளது. குழந்தை பிறந்த பெண்கள் பெற்றோருக்கான சந்திப்பிற்க்காக ஒன்றுகூடும் போது அவர்களின் குழந்தைகளிடையே ஒற்றுமையைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த அதிர்ச்சி மிகுந்த சம்பவத்திற்கு காரணமான நபரைப் பற்றி ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பெற்றோர்கள் விசாரித்தனர். இதையடுத்து சிட்னியை […]

3 Min Read
Default Image

போரை தொடங்கியது அவர்கள் தான்..பகடைக்காயாக உக்ரைன் – அதிபர் புதின் பேச்சு

ரஷ்யாவுக்கு எதிரான பகடைக்காயாக உக்ரைன் நாட்டை பயன்படுத்துகின்றனர் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேச்சு. ஓராண்டு நிறைவு: உக்ரைன் நாட்டுக்கு எதிராக போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து ஒரு முக்கிய நிகழ்வில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், மீண்டும் சொல்கிறோம், போரை தொடங்கியது அவர்கள் தான். நாங்கள் போரை நிறுத்தவே பலத்தை பயன்படுத்தினோம். உக்ரைன் உடனான பிரச்சனையை அமைதியான வழியில் தீர்க்க எல்லா வகையிலும் நாங்கள் முயற்சிக்கிறோம். மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான […]

4 Min Read
Default Image

இம்ரான் கானுக்கு முன் ஜாமின் வழங்கியது லாகூர் உயர்நீதிமன்றம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு லாகூர் உயர்நீதிமன்றம் (LHC) இன்று பாதுகாப்பு ஜாமீன் வழங்கியது. பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திற்கு (ECP) வெளியே வன்முறை போராட்டங்கள் தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மார்ச் 3 ஆம் தேதி வரை லாகூர் உயர்நீதிமன்றம் பாதுகாப்பு ஜாமீன் வழங்கியது. கடந்த ஆண்டு தடை செய்யப்பட்ட நிதியுதவி வழக்கில் 70 வயதான கான் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் (ECP) தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, எதிர்ப்புகள் வெடித்தன. தோஷகானா […]

3 Min Read
Default Image

பசுபிக் பெருங்கடலில் மீண்டும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்ட வட கொரியா.!

வடகொரியா நாடானது அண்மையில் பசுபிக் பெருங்கடலில் ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது.  சர்வதேச அளவில்  தங்களை சக்தி வாய்ந்த நாடாக கருத வட கொரியா பல்வேறு ஏவுகணை சோதனைகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. இந்த ஏவுகணை சோத்தனியானது தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு புகைச்சலை உண்டு செய்துள்ளது என்றே கூறபடுகிறது. ஏவுகணை சோதனை : வட கொரியா நேற்று (திங்கள்கிழமை) இரண்டு குறுகிய தூர இலக்குகளை தாக்க கூடிய ஏவுகணைகளை நாட்டின் கிழக்கே உள்ள பசுபிக் […]

5 Min Read
Default Image

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்.. 3 பேர் உயிரிழப்பு! 200க்கும் மேற்பட்டோர் காயம்!

துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி. மீண்டும் நிலநடுக்கம்: துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் இன்று 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வு இஸ்ரேலிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. துருக்கியில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளிலும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், குடியிருப்பாளர்கள் சிக்கியதாகவும், பலர் […]

4 Min Read
Default Image

பிரேசில் நிலச்சரிவுக்கு 36 பேர் உயிரிழப்பு.! மீட்பு பணிகள் தீவிரம்.!

பிரேசிலின் சாவ் பாலோவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் பெய்து வந்த கனமழையால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலச்சரிவில் நகரில் 50க்கும் மேற்பட்ட  வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மழை வெள்ளத்தால் சாவோ செபஸ்டியாவோ, உபாதுபா, இல்ஹபேலா மற்றும்  பெர்டியோகா நகரங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு பேரிடர் நிலையில் இருக்கிறது, மேலும் சாலைகள் அடைக்கப்பட்டு நகரத்திற்கு செல்லும் பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இது பிரேசில் […]

3 Min Read
Default Image

Breaking: துருக்கி-சிரியா எல்லையில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

துருக்கியின் தென்கிழக்கு ஹடாய் மாகாணத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இஸ்தான்புல்லை தளமாகக் கொண்ட கண்டில்லி கண்காணிப்பகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 7.7 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
Default Image

#Breaking : துருக்கி, சிரியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! 6.3 ரிக்டர் அளவில் பதிவு..!

துருக்கி, சிரியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  துருக்கி மற்றும் சிரியா எல்லைப் பகுதியில் இரண்டு வாரங்களுக்கு பிறகு  மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் 6.3 ரிக்டர் அளவில் பதிவானதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு இஸ்ரேலிலும் உணரப்பட்டது. கடந்த பிப்ரவரி 6 அன்று, துருக்கி மற்றும் சிரியாவில் 7.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த  நிலநடுக்கம் ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து மேலும் பல […]

2 Min Read
Default Image

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் சென்றார்..!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் தலைநகர் கிவ்க்குச் சென்றார். ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலாந்திற்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் முதற்கட்டமாக உக்ரைன் தலைநகரமான கீவ் நகருக்கு சென்றுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு சென்றுள்ளார். அங்கு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் பைடன் கீவ் நகரில் நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

2 Min Read
Default Image

6 செ.மீ வாலுடன் பிறந்த குழந்தை..! ஆச்சரியத்தில் மருத்துவர்கள்..!

பிரேசிலில் 6 செ.மீ வாலுடன் பிறந்த பெண் குழந்தை இன்று மருத்துவ துறை  வளர்ச்சி அடைந்திருந்தாலும் அதற்கேற்றவாறு பல சவால்களையும் சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் பிரேசில் நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. வாலுடன் பிறந்த குழந்தை   அந்த குழந்தை சரியான எடையுடன் ஆரோக்கியமாக பிறந்துள்ளது. ஆனால் குழந்தைக்கு பின்னால் 6 சென்டிமீட்டர் நீளத்தில் ஒரு வால் இருந்துள்ளது. இதனை பார்த்து மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்த நிலையில், பிரேசில் […]

4 Min Read
Default Image

ஆப்கானில் பெண்கள் கருத்தடை சாதனம் பயன்படுத்த தடை – தாலிபான்கள் அதிரடி உத்தரவு..!

ஆப்கானில் பெண்கள் கருத்தடை சாதனம் பயன்படுத்த தலிபான்கள் தடை விதிப்பு.  கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள்  ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றினர். தாலிபான்கள் கையில் ஆப்கானிஸ்தான் ஆட்சி சென்றது முதற்கொண்டு அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு கடுமையான சட்ட திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. கருத்தடை சாதனம் பயன்படுத்துவதற்கு தடை பெண்கள் வெளியில் செல்வதற்கும், ஆடை அணிவதற்கும், கல்வி பயில்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது பெண்களின் உடலிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுதாது. அந்த வகையில் தற்போது பெண்கள் […]

3 Min Read
Default Image

பிரேசிலில் கனமழையால் வெள்ளம்; 26 பேர் பலி.!

பிரேசிலில் பெய்த கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் பெய்து வந்த கனமழையால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, நகரில் 50 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதனால் வடக்கு சாவ் பாலோ மாநிலத்தில் உள்ள இரண்டு நகரங்களில் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் எனவும் பிரேசில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மழைவெள்ளத்தால் சாவோ செபஸ்டியாவோ, உபாதுபா, இல்ஹபேலா மற்றும்  பெர்டியோகா நகரங்க;ல் மிகவும் பாதிக்கப்பட்டு பேரிடர் நிலையில் […]

3 Min Read
Default Image

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் தொடர் துப்பாக்கிச்சூடு; 6பேர் பலி.!

அமெரிக்காவின் மிசிசிப்பியில், நடந்த தொடர் துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள டேட் கவுண்டியில், அர்கபுட்லா கம்யூனிட்டியில் தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் குறைந்தது ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இதில்  தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்கபுட்லா சாலையில் உள்ள கடைக்குள் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாகவும், அதில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கவுண்டி காவல் அதிகாரி ஷெரிப் பிராட் லான்ஸ் […]

4 Min Read
Default Image

துருக்கி, சிரியாவில் பலி எண்ணிக்கை 45,000-ஐ தாண்டியது.!

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 45,000 ஜக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்,மேலும் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் எல்லாம் தரையோடு தரைமட்டமாயின. பல நாடுகள் தொடர்ந்து ஆதரவளித்து வந்த நிலையில், அந்நாடுகளில் உள்ள மக்கள் தங்கள் உடமைகள், சொந்த பந்தங்களை இழந்து தவித்தனர். இந்த நிலையில் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. துருக்கி மற்றும் […]

2 Min Read
Default Image

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்..! 6.1 ரிக்டர் அளவில் பதிவு..!

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்தோனேசியாவில் கிழக்கு மண்டலமான மலுகுவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுட்டுள்ளது. இந்தோனேசியாவின் தனிம்பார் தீவு பகுதியில் நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.1 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்ற தகவல்கள் தெரியவில்லை.

1 Min Read
Default Image

ஒரு உள்ளாடை விலை 4 லட்ச ரூபாய்.?! ஏலத்தில் சம்பவம் செய்த ஹாலிவுட் பிரபலம்.!

உலக புகழ்பெற்ற பிரேக்கிங் பேட் தொடரில் நடித்த ப்ரையன் க்ரான்ஸ்டனின் உள்ளாடை ஏலம். உலக புகழ்பெற்ற பிரேக்கிங் பேட் (Breaking Bad) தொடரில் வால்டர் வைட் (Walter white) ஆகா நடித்த பிரையன் க்ரான்ஸ்டனின் உள்ளாடை ஏலம் விடப்பட உள்ளது. நடிகர் பிரையன் க்ரான்ஸ்டனின், ஹிட் க்ரைம் டிராமா தொடரில் வரும் பைலட் எபிசோடில் ஒரு பாலைவனக் காட்சியில் வால்டர் ஒயிட் கதாபாத்திரத்தின் வெள்ளை உள்ளாடைகள் ஏலம் விடப்பட உள்ளது. லாஸ் ஏஞ்சல்சில் நடைபெறவிருக்கும் ஆன்லைன் ஏலத்தில் […]

3 Min Read
Default Image

வட கொரியா பிரதமர் கிம் ஜாங் உன்னின் புதிய உத்தரவு..!

வடகொரியா அதிபர் கிம் ஜாங் தன் மகளின் பெயரை வேறு எந்த பெண்ணிற்கும் வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.  வடகொரியாவின் பிரதமர் கிம் ஜாங் உன்,  அவரது மகளின் பெயரை (ஜூ ஏ) நாட்டிலுள்ள வேறு எந்த பெண்ணிற்கும் வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். அதிபர் கிங் ஜாம் தனது பத்து வயது மகளான ஜூ ஏ வின் பெயரை வேறு எந்த பெண்ணிற்கும் வைக்க கூடாது என்றும் அந்தப் பெயர் கொண்டவர்கள் ஒரு வாரத்தில் அவர்களது பெயரை மாற்ற […]

2 Min Read
Default Image