Categories: உலகம்

பிரதமர் மோடி அனைவரையும் ஈர்க்கக்கூடியவர்..! பிரான்ஸ் எம்பி ஆன் ஜெனெட்..

Published by
செந்தில்குமார்

பிரதமர் மோடி மிகவும் ஈர்க்கக்கூடியவர் என பிரான்ஸ் எம்பி ஆன் ஜெனெட் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பாரிஸ் சென்றடைந்தார். பாரிஸ் சென்றடைந்த பிரதமருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே விமான நிலையத்தில் வரவேற்றார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் குறித்து பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆன் ஜெனெட் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், பாஸ்டிலி தினத்தில் இந்திய வீரர்கள் இங்கு வந்திருப்பது என்னை மிகவும் கவர்ந்தது. அங்கு பிரதமர் மோடியையும் நான் சந்தித்தேன். முன்பு நான் அவரை 2018 இல் சந்தித்தேன். என்று கூறினார்.

பிரதமர் மோடி அனைவரையும் ஈர்க்கக்கூடியவர், அவருடன் பேசும் மக்களை நம்ப வைக்கும் உறுதியையும் கொண்டவர். இந்த கூட்டாண்மையை பலப்படுத்தப் போகிறோம். நமக்கிடையிலான இணைப்புகளையும் கூட்டாண்மையையும் வலுப்படுத்த வேண்டுமானால், இரு நாடுகளிலும் புலம்பெயர் மக்களை அதிகரிக்க வேண்டும். ஏனென்றால், நாம் ஒருவரையொருவர் நன்கு அறிந்து சிறப்பாக ஒத்துழைக்க முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

12 minutes ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

1 hour ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

1 hour ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

3 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

4 hours ago