Russian strikes - Ukraine Odesa[File Image]
உக்ரேனின் கருங்கடல் துறைமுகமான ஒடேசா நகரம் மீது ரஷ்யா ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் சுமார், 20 அடுக்கு மாடி கட்டிடங்கள் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 124 ஆண்டுகள் பழமையான ஒடேசா நுண்கலை அருங்காட்சியகமும் சேதமடைந்ததுள்ளது.
அது மட்டும்மல்லாமல், ஒரு தானிய கிடங்கு மற்றும் தானியங்களுடன் கூடிய லாரிகள் தீப்பிடித்து எரிந்தன, பின்னர் அது உடனடியாக அணைக்கப்பட்டதாக உக்ரேனிய ஜனாதிபதியின் தலைமைப் பணியாளர் ஆண்ட்ரி யெர்மக் தெரிவித்துள்ளார்.
கருங்கடல் வழியாக உக்ரேனிய தானிய ஏற்றுமதியை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இருந்து மாஸ்கோ வெளியேறிய ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உக்ரைனின் முக்கிய தானிய துறைமுகமான ஒடேசாவும் இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல் நடைபெற்று வருகிறது.
தெற்கு ஒடேசா மற்றும் கெர்சன் பகுதிகளை குறிவைத்து ரஷ்யா நான்கு வெவ்வேறு ஏவுகணைகளை ஏவியது என்று உக்ரேன் விமானப்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…