Categories: உலகம்

பிரபாகரன் மரணம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.! இலங்கை முன்னாள் அதிபர் பரபரப்பு தகவல்.!

Published by
மணிகண்டன்

பிரபாகரன் மரணம் பற்றி எனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என இலங்கை முன்னாள் அதிபர் சிறிசேனா இலங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். 

இலங்கையில் தமிழகர்கள் வாழும் பகுதியின் மீதான இலங்கை ராணுவத்தின் தாக்குதலை எதிர்த்து போராடிய தமிழ் இயக்கங்களில் ஆயுதம் ஏந்தி போராட்ட களத்தில் மிக தீவிரமாக இயங்கிய மிக முக்கிய இயக்கம் பிரபாகரன் தலைமையினான விடுதலை புலிகள் இயக்கம் தான். 1983 ஜூலையில் துவங்கிய உள்நாட்டு போர் பல ஆண்டுகளாக தொடர்ந்தது.

அதன் பிறகு 2009இல் மே 18ஆம் தேதி விடுதலை புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்ட பின்னர் இந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த உள்நாட்டு போரில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழகர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதாக ஐநா குற்றம் சாட்டி இருந்தது.

இந்த போரின் கடைசி காலத்தில் 2 மாத காலம் இடைக்கால பாதுகாப்பு அமைச்சராக முன்னாள் இலங்கை அதிபர் மைதிரிபால் சிறிசேனா பொறுப்பில் இருந்தார். இவர் அதிபராக பொறுப்பில் இருந்த போது, நான் தான் போரை முன்னின்று நடத்தினேன். பிரபாகரனை வீழ்த்தியதில் எனக்கு முக்கிய பங்கு உள்ளது. என அப்போது கூறியிருந்தார்.

ஆனால் அண்மையில் இலங்கை யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இலங்கை முன்னாள் இலங்கை அதிபர் மைதிரிபால் சிறிசேனா கூறுகையில், நான் போர் இறுதிக்கட்ட சமயத்தில் தற்காலிகமாக பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பில் இருந்தேன். பிரபாகரனுக்கு மரபணு சோதனை நடைபெற்றது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என குறிப்பிட்டு சிறிசேனா பேசியுள்ளார். இந்த கருத்தானது அவர் அதிபராக இருந்தபோது பேசியதற்கு நேர்மாறாக இருப்பதால் உலக அரங்கில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகன் மரணம் மீதான கேள்விகளையும் சிறிசேனா பேட்டி எழுப்புகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

7 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

7 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

10 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

10 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

11 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

12 hours ago