Categories: உலகம்

பிரபாகரன் மரணம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.! இலங்கை முன்னாள் அதிபர் பரபரப்பு தகவல்.!

Published by
மணிகண்டன்

பிரபாகரன் மரணம் பற்றி எனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என இலங்கை முன்னாள் அதிபர் சிறிசேனா இலங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். 

இலங்கையில் தமிழகர்கள் வாழும் பகுதியின் மீதான இலங்கை ராணுவத்தின் தாக்குதலை எதிர்த்து போராடிய தமிழ் இயக்கங்களில் ஆயுதம் ஏந்தி போராட்ட களத்தில் மிக தீவிரமாக இயங்கிய மிக முக்கிய இயக்கம் பிரபாகரன் தலைமையினான விடுதலை புலிகள் இயக்கம் தான். 1983 ஜூலையில் துவங்கிய உள்நாட்டு போர் பல ஆண்டுகளாக தொடர்ந்தது.

அதன் பிறகு 2009இல் மே 18ஆம் தேதி விடுதலை புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்ட பின்னர் இந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த உள்நாட்டு போரில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழகர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதாக ஐநா குற்றம் சாட்டி இருந்தது.

இந்த போரின் கடைசி காலத்தில் 2 மாத காலம் இடைக்கால பாதுகாப்பு அமைச்சராக முன்னாள் இலங்கை அதிபர் மைதிரிபால் சிறிசேனா பொறுப்பில் இருந்தார். இவர் அதிபராக பொறுப்பில் இருந்த போது, நான் தான் போரை முன்னின்று நடத்தினேன். பிரபாகரனை வீழ்த்தியதில் எனக்கு முக்கிய பங்கு உள்ளது. என அப்போது கூறியிருந்தார்.

ஆனால் அண்மையில் இலங்கை யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இலங்கை முன்னாள் இலங்கை அதிபர் மைதிரிபால் சிறிசேனா கூறுகையில், நான் போர் இறுதிக்கட்ட சமயத்தில் தற்காலிகமாக பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பில் இருந்தேன். பிரபாகரனுக்கு மரபணு சோதனை நடைபெற்றது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என குறிப்பிட்டு சிறிசேனா பேசியுள்ளார். இந்த கருத்தானது அவர் அதிபராக இருந்தபோது பேசியதற்கு நேர்மாறாக இருப்பதால் உலக அரங்கில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகன் மரணம் மீதான கேள்விகளையும் சிறிசேனா பேட்டி எழுப்புகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

17 minutes ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

1 hour ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

1 hour ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

3 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

4 hours ago