Categories: உலகம்

அமெரிக்காவில் ‘லா டூ சான்’ வரை 400 கீமி நடந்து வந்த கரடி பொம்மை…!

Published by
Edison

அமெரிக்காவில் உள்ள ஒரு நபர் கரடி பொம்மை உடையில் ‘லாஸ் ஏஞ்செல்ஸ்லிருந்து  சான் பிரான்சிஸ்கோ’ வரை 400 கி.மீ. நடந்தே சென்ற சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் வசிக்கும் ஜெஸ்ஸி லாரியோஸ் என்ற 33 வயது இளைஞர் ஒருவர் ‘பியர்சன்’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். ஏனெனில்,2019ஆம் ஆண்டில் நடைபெற்ற மாரத்தானில் கரடி பொம்மை உடையுடன் அவர் கலந்து கொண்டார்.லாரியோஸ்,அந்த கரடி பொம்மை உடையை தனது சொந்த முயற்சியினால் வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஜெஸ்ஸி லாரியோஸ்,இந்த கரடி பொம்மை உடையணிந்து லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சான் பிரான்சிஸ்கோ வரை 400 கி.மீ. நடந்தே பயணம் செய்து வருகிறார்.வியாழக்கிழமை நிலவரப்படி,160 கிலோமீட்டர் தூரத்தை லாரியோஸ் கடந்துள்ளார்.

சான் பிரான்சிஸ்கோ வரை நடப்பது பற்றி லாரியோஸ் கூறுகையில், தனக்கு மற்றொரு கரடி பொம்மை உடை தேவைப்படுவதால்,இந்த நடைபயணம் மேற்கொண்டுள்ளதாகவும்,அதற்காக,மக்கள் நன்கொடை தந்து உதவ வேண்டும் என்றும் கூறியுள்ளார்.மேலும் மக்கள்,தனக்கு பணம் அனுப்புவதற்காக ஒரு ‘ கோ ஃபவுண்ட் மீ ‘ (Go Fund Me) என்ற பக்கத்தை சமூக வலைதளத்தில் உருவாக்கியுள்ளார்.தனக்கு கரடி பொம்மை உடை  வாங்கிய பிறகு மீதமுள்ள தொகையை ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.எனவே, லாரியோஸிற்கு பலரும் நிதி அளித்து வருகின்றனர்.

இதனால் லாரியோஸ்,சமூக ஊடகங்களின் மூலம் அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறார்.

 

Published by
Edison

Recent Posts

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…

13 minutes ago

5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…

38 minutes ago

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…

1 hour ago

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

3 hours ago

“சங்கிகளின் மகிழ்ச்சிக்காக பேசுகிறார் இபிஎஸ்” – எடப்பாடி பழனிசாமிக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…

3 hours ago

அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…

4 hours ago