Categories: உலகம்

China : சீனாவை புரட்டி போட்ட சூறாவளி.. ஒரே நாளில் 10 பேர் பலி.!

Published by
மணிகண்டன்

சீனாவில் தற்போது பல்வேறு நகரங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இந்த சூறாவளி காற்றில் பல்வறு உயிர்சேதங்கள், பொருள்சேதங்கள் ஏற்பட்டுள்ளன என  சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக, சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சுங் மற்றும் யாசெங் நகரில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் சூறாவளி காற்று வீசியது. மேலும்,  சுகியன் நகரின் சில பகுதிகளில் சூறாவளி காற்று தாக்கியுள்ளது. மேலும் பலத்த மழை பெய்யும் என சீன வானிலை ஆய்வு மையமும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.

இந்த சீன சூறாவளி மற்றும் கனமழையில் சிக்கி நேற்று ஒரு நாளில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த சூறாவளியால் 5,500க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 137 வீடுகள் சேதமடைந்துள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர்..

சூறாவளி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் கடந்த சில வருடங்களாகவே பல இறப்புகள் நிகழ்ந்துள்ளன. 2022 இல், ஒரு சூறாவளியால் ஒருவர் உயிரிழந்தார் என்றும், 2021 ஆம் ஆண்டு 4 பேர் உயிரிழந்தனர் என்றும் , 2021இல் வுஹானில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published by
மணிகண்டன்

Recent Posts

மீத்தேன் கண்காணிப்பு செயற்கைக் கோள் திடீர் மாயம்! நடந்தது என்ன?

பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…

19 minutes ago

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து! காரணம் இது தான் ரயில்வே துறை விளக்கம்!

கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…

2 hours ago

கடலூர் விபத்து : ரயில்வே கேட் அருகே நின்றிருந்தவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…

2 hours ago

நாளை முழுவதும் ஆட்டோ,பேருந்துகள் ஓடாது ஸ்ட்ரைக்! என்ன காரணம்?

சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…

2 hours ago

சென்னையில் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு! ஆவணங்களை ரெடியாக வைத்திருக்க அறிவுறுத்தல்!

சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…

3 hours ago

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து….3 பேர் பலி!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…

3 hours ago